போலி விசாவுடன் கனடா செல்ல முயன்ற யாழ். இளைஞர் கைது
போலி விசாவைப் பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்த இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவரே போலி விசாவின் மூலம் கனடா செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த இளைஞர் ஜப்பான் ஊடாக கனடா செல்ல முற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான இளைஞரி்டமிருந்து நெதர்லாந்திற்குப் பயணமாவதற்காகத் தயாரிக்கப்பட்டிருந்த போலி விசா ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போலி விசாவுடன் கனடா செல்ல முயன்ற யாழ். இளைஞர் கைது
Reviewed by NEWMANNAR
on
June 20, 2015
Rating:

No comments:
Post a Comment