பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம்
கட்டளையை பொருட்படுத்தாது செலுத்தப்பட்ட லொறியொன்றின் மீது அரந்தலாவை பொலிஸ் காவலரணுக்கு அருகே பொலிஸார் இன்று (23) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக மாடுகள் ஏற்றிச் செல்லப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த லொறியை மகாஓயா மங்களகம பொலிஸ் காவலரணில் நிறுத்துமாறு பொலிஸார் கட்டளை இட்டுள்ளனர்.
எனினும், அதனை பொருட்படுத்தாது லொறி செலுத்தப்பட்டுள்ளதுடன், அரந்தலாவை காவலரணையும் தாண்டி செல்வதற்கு முற்பட்ட போது, லொறி மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான லொறி அரந்தலாவை பொலிஸ் காவலரணிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வீதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
லொறியிலிருந்த ஏனைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிப் பிரயோகம்
Reviewed by NEWMANNAR
on
June 23, 2015
Rating:

No comments:
Post a Comment