மன்னாரில் எதிர்வரும் 27ஆம் திகதி மாபெரும் கையெழுத்து வேட்டை.-Photos
மன்னார் நகரத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாபெரும் கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது.
-மன்னார் சர்வோதைய அமைப்பின் ஏற்பாட்டில் மன்னார் நகர மண்டபத்தில் குறித்த கையொழுத்து வேட்டை இடம் பெறவுள்ளது.
''அரசியல்வாதிகளுக்கு வேட்பு மனு வழங்கும் போது கருத்திற் கொள்வதற்கு அரசியல் கட்சிகள் இணங்கிய பொதுவான அளவுகோல்கள்'' என்னும் கணிப்பீட்டு ஒப்பந்தத்தில் பல சிரேஸ்ட அரசியல் வாதிகளும் பல கட்சிகளைச் சேர்ந்தோரும் கையெப்பமிட்டுள்ளனர்.
இவ் பிரகடனத்தினை 'மார்ச் 12 பிரகடனம்' என அழைக்கப்படுகின்றது.
அந்த வகையில் இவ் பிரகடனத்தில் உள்ள அனைத்து அளவு கோல்களினையும் நாட்டின் பிஜைகள் வாசித்து புரிந்து கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கையெழுத்து வேட்டை நாடு பூராகவும் தொடராக இடம் பெறவுள்ளது.
அந்த வகையில் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 11.35 மணி தொடக்கம் 2.30 வரை இவ் கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது.
இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு உங்களது கையெழுத்துக்கள் மூலமாக நல்தொரு அரசியல்வாதியை பாராளுமன்றம் அனுப்புவதற்கும் நாட்டில் நல்லாட்சியை நடை முறைப்படுத்த அனைவரும் இவ் கையெழுத்துத் வேட்டையில் பங்கு கொள்ள மன்னார் சர்வோதயத்தின் சார்பாக அழைப்பு விடுத்துள்ளனர்.
மன்னாரில் எதிர்வரும் 27ஆம் திகதி மாபெரும் கையெழுத்து வேட்டை.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 25, 2015
Rating:

No comments:
Post a Comment