அண்மைய செய்திகள்

recent
-

பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்


பொதுத் தேர்தலுக்கான சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 13 ஆம் திகதிவரை கட்டுப்பணம் செலுத்தமுடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவிக்கின்றார்.

ஒரு வேட்பாளர் 2000 ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட செலயகத்தில் இயங்கும் தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் சுட்டிக்காட்டினார்.
பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம் Reviewed by NEWMANNAR on June 28, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.