மன்னார் பரப்பாங்கண்டலில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண் வசமாக மாட்டிக்கொண்டார்.
மன்னார் பரப்பாங்கண்டல் கிராமத்தில் இரவு நேரங்களில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த குடும்ப பெண் ஒருவரை அக்கிராமவாசி ஒருவர் பிடிந்து உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை இடம் பெற்றள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
குறித்த பெண் மன்னார் பகுதியில் உள்ள பல கிராமங்களில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை குறித்த பெண் பரப்பாங்கண்டல் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் திருடச் சென்றுள்ளார்.
இதன் போது வீட்டில் ஒருவரும் இல்லாத நிலையில்,வீட்டின் உரிமையாளர் மரணச்சடங்கு ஒன்றிற்கு சென்று விட்டு வீடு வந்த போது தனது வீட்டில் மனித நடமாட்டம் உள்ளதை அவதானித்தார்.
உடனடியாக குறித்த வீட்டின் உரிமையாளர் தனது வீட்டை சோதனையிட்டார்.
இதன் போது ஒருவர் வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்து கொண்டார். உடனடியாக தனது உறவினர் ஒருவரின் உதவியுடன் வீட்டில் சோதனை செய்த போது வீட்டு சமையல் அறையில் பொருட்கள் அடுக்கி வைக்கும் மேசைக்கு அடியில் பதுங்கி இருந்த நிலையில் திருடன் மாட்டிக்கொண்டார்.
இதன் போதே தெரிய வந்தது திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டது ஒரு குடும்பப்பெண் என்று.
உடனடியாக குறித்த பெண் உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த வீட்டில் இருந்து சுமார் 41 ஆயிரம் ரூபாய் பணத்தை குறித்த பெண் திருடியுள்ளார்.
-தற்போது மேலதிக விசாரனைகளை உயிலங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பரப்பாங்கண்டலில் திருட்டுச்சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பெண் வசமாக மாட்டிக்கொண்டார்.
Reviewed by NEWMANNAR
on
June 20, 2015
Rating:

No comments:
Post a Comment