அண்மைய செய்திகள்

recent
-

மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழாவில் 459 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்


கல்வி அமைச்சும் இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்­டுத்­துறை பேர­வையும் இணைந்து நெஸ்ட்லே லங்கா லிமிட்­டட்டின் அனு­ச­ர­ணை­யுடன் நடத்தும் 23ஆவது மைலோ பாட­சா­லைகள் விளை­யாட்­டுத்­துறை வர்ண விருது விழா கொழும்பு தாமரை தடாக மண்­ட­பத்தில் எதிர்­வரும் 22ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.


31 வகை­யான விளை­யாட்­டு­களில் சர்­வ­தேச மட்­டத்­திலும் அதி­க­பட்­ச­மாக தேசிய மட்­டத்­திலும் கடந்த வருடம் சாதித்த 459 பாட­சாலை மாணவ, மாண­வி­க­ளுக்கு மைலோ பாட­சா­லைகள் வர்ண விரு­துகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

கல்வி அமைச்­சி­னதும் இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்­டுத்­துறை பேர­வை­யி­னதும் வர்ண விரு­து­க­ளுக்­கான விதி­களின்படி எவ­ரது பெய­ரேனும் விடு­பட்­டி­ருந்தால் அவர்கள் தொடர்­பான சரி­யான ஆதா­ரங்­க­ளுடன் ஜூன் 15ஆம் திக­திக்கு முன்னர் சங்­கங்­களின் ஊடாக விண்­ணப்­பிக்­கு­மாறு பாட­சாலை அதி­பர்கள் கோரப்­பட்­டுள்­ளனர். இது குறித்து மாகாண கல்விப் பணிப்­பா­ளர்­களும் கவனம் செலுத்­த­வேண்டும் என கோரப்பட்டுள்ளனர்.

பாட­சா­லை­க­ளுக்­கான 31 விளை­யாட்­டுத்­துறை சங்­கங்கள் பரிந்­து­ரைத்­துள்ள பட்­டி­யல்­களில் வட பகு­தி­யி­லி­ருந்து வர்ண விரு­துக்கு இம்­முறை எவரும் பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை என இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்­டுத்­துறை பேர­வையின் செய­லாளர் உபாலி அம­ர­துங்க தெரி­வித்தார்.

சர்­வ­தேச விளை­யாட்டுப் போட்­டி­க ளில் கலந்­து­கொண்ட அல்­லது 20இற்கும் மேற்­பட்ட பாட­சா­லைகள் பங்­கு­பற்­றிய போட்­டி­களில் சாதித்த 17 வய­துக்கும் 20 வய­துக்கும் இடைப்­பட்ட மாண­வர்கள் வர்ண விரு­து­களைப் பெறத் தகுதி உடை­ய­வர்கள் என இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்­டுத்­துறைப் பேரவைத் தலை வர் பி. ஏ. அபே­ரட்ன தெரி­வித்தார்.

மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழாவில் 459 மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர் Reviewed by Author on June 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.