அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பூண்டிமாதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு 2015

மன்னார் பூண்டிமாதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு கடந்த 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு.P.ஞானராஜ், உதவி கல்வி பணிப்பாளர், கல்வி திணைக்களம், மன்னார் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அருட்தந்தை டீ. றொசான் புனித செபஸ்தியார் பேராலய உதவி பங்குத்தந்தை,  திரு.து. ஒஸ்மன் குலாஸ் சிறுவர் உரிமை மேம்பாட்டு அலுவலர், பொறியியலாளர்.P.து.றமேஸ், தலைவர், பனங்கட்டிக்கொட்டு கல்வி கலாச்சார மேம்பாட்டு அமைப்பு அவர்களும் கலந்து ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வு எல்லோராலும் வியக்கும் வண்ணம் எமது சிறார்கள் மிகவும் சிறப்பாக செயற்பட்டனர். அத்துடன் கண்கவர் உடற்பயிற்சி நிகழ்வும் சிறார்களினால் இடம்பெற்றது. அத்துடன் பெற்றோர் விளையாட்டும் இடம்பெற்று மிகவும் சிறப்பாக விளையாட்டு நிகழ்வு நடந்து முடிந்தது.

குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.




முன்பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன்பள்ளி,
எமில்நகர், மன்னார்.







மன்னார் பூண்டிமாதா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு 2015 Reviewed by NEWMANNAR on June 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.