வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு அதியுயர் தண்டனை வழங்கக்கோரி மன்னாரில் அமைதி ஊர்வலம்.-Photos
வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு நீதி கோரியும் குறிப்பாக புங்குடுதீவு மாணவியின் கொலையினை கண்டித்தும் கைது செய்யப்பட்ட 9 குற்றவாழிகளுக்கும் அதியுயர் தண்டனை வழங்கக்கோரியும் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த அமைதி ஊர்வலம் இன்று(01) திங்கட்கிழமை காலை மன்னாரில் இடம் பெற்றது.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மகாலட்சுமி குருசாந்தன் தலைமையில் இன்று(1) திங்கட்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் பொது நூலகத்திற்கு முன்பாக குறித்த அமைதி ஊர்வலம் ஆரம்பமானது.
-இதன் போது குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கனக்கான பெண்கள் தமது வாயை கறுப்பு துணியினால் கட்டி சுலோகங்களை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று மன்னார் பஸார் பகுதியில் ஒன்று கூடினர்.
-அங்கு சுமார் 30 நிமிடங்கள் அமைதியான முறையில் சுலோகங்களை ஏந்தியவாறு நின்றனர்.பின் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக கை எழுத்து வேட்டை இடம் பெற்றது.
-பின் குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மீண்டும் மன்னார் பொது நூலக நுழைவாயிலை சென்றடைந்தது.
(மன்னார் நிருபர்)
வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு அதியுயர் தண்டனை வழங்கக்கோரி மன்னாரில் அமைதி ஊர்வலம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 01, 2015
Rating:
No comments:
Post a Comment