அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 85 பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.-Photos

வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து மன்னார் மற்றும் யாழ் மாவட்டங்களை சேர்ந்த உதவி தேவைப்படும் நபர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்று(31) ஞாயிற்றுக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட ஆண்கள்,பெண்கள் என சுமார் 85 பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, மன்னார் பேராலய பங்கின் துணை பங்குத்தந்தை வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோ நோகராதலிங்கம் , மன்னார் நகரசபையின் முன்னால் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், முன்னால் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், முன்னால் உறுப்பினர் இ.குமரேஸ், வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர் .எஸ்.சத்தியசீலன் , மன்னார் நகரசபையின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.















மன்னாரில் 85 பயனாளிகளுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on June 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.