வளமான மன்னாருக்கு எதிர்கால திட்டமிடல்
முற்குறிப்பு:
கடந்த பல தசாப்தங்களாக எமது மக்களின் வேலை வாய்ப்பு பொருளாதாரம் என்பன பல வழிகளில் முடக்கப்பட்டதால் இன்று மக்கள் தமது சிறு சிறு தேவைகளுக்கும் சலுகைகளுக்கும் பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இத்தகைய வறிய நிலையில் மக்களை தொடர்ந்து பேணுவது உள்நோக்கம் கொண்ட சிலரின் தேவையாக உள்ளது. இக்காரணத்தினால் மக்களின் நீண்ட கால வளர்ச்சியை கருத்தில் எடுக்காது அவர்களை வறிய நிலையில் தொடர்ந்திருக்கச் செய்யும் கைங்கரியங்களே மேலெழுந்து காணப்படுகின்றன.
இந்த அவல நிலையில் இருந்து எம் மக்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால் தொடர்ந்தும் பொருளாதார சீர்கேட்டால் கையேந்தும் மக்களாகவும் தமது எதிர்கால சந்ததியினரின் பொருளாதார,உடல்,உள கல்வி வளர்ச்சிகளை முன்னெடுக்க முடியாதவர்களாகவுமே வறிய நிலையில் வாழ்க்கையைத் தொடர்வார்கள்.
தமது சிறு சிறு தேவைகளுக்கும் உதவிகளுக்கும் வசதி உள்ளவர்களிடம் யாசிப்பதன் மூலம் அந்நன்றிக் கடனுக்காக விலைபோய் தம் காலில் திடமாக நின்று உறுதியான முடிவுகளை தம் வழித்தோன்றல்களின் எதிர்கால நலனுக்காக எடுக்க முடியாதவர்களாகி பிறரிலேயே தங்கி வாழும் இழிநிலைக்கு தள்ளப்பட்டு என்றுமே முன்னேற்றம் காண முடியாத அடிமைத்தளையில் கட்டுண்டு வாழ்வார்கள்.
இதனை கவலையுடன் தன் முன் அனுபவத்தின் மூலம் கண்டறிந்த கட்டுரையாளரான திட்ட முன்மொழிவாளர் மக்களை பொருளாதாரத்தில் வளப்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெற்ற அறிவு ஜீவிகளாக தம் காலில் திடமாக ஊன்றி நிற்கும் மக்களாக மாற்றும் தூரப் பார்வையுடனேயே கீழ்வரும் மன்னார் அபிவிருத்திக்கான திட்டங்களை மன்னார் அரசாங்க அதிபருக்கு முன்மொழிந்துள்ளார்.
இதை அங்கீகரித்து ஏற்போர் தனியாகவும் கூட்டாகவும் குறிப்பாக கிராம மட்ட அமைப்புக்களான கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாதர் சங்கங்கள் சன சமூக நிலையங்கள்,விளையாட்டு கழகங்கள் மீனவர் மற்றும் விவசாய அமைப்புககள் ஊடாக இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்படி அதிகாரத் தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென உணர்வு பூர்வமாக வேண்டி நிற்கின்றோம். இது சம்மந்தமாக மன்னார் அரசாங்க அதிபருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்கும் அனுப்பப்பட்ட முன்மொழிவுகள் கீழே தரப்படுகின்றன.
இந்த அவல நிலையில் இருந்து எம் மக்கள் மீட்டெடுக்கப்படாவிட்டால் தொடர்ந்தும் பொருளாதார சீர்கேட்டால் கையேந்தும் மக்களாகவும் தமது எதிர்கால சந்ததியினரின் பொருளாதார,உடல்,உள கல்வி வளர்ச்சிகளை முன்னெடுக்க முடியாதவர்களாகவுமே வறிய நிலையில் வாழ்க்கையைத் தொடர்வார்கள்.
தமது சிறு சிறு தேவைகளுக்கும் உதவிகளுக்கும் வசதி உள்ளவர்களிடம் யாசிப்பதன் மூலம் அந்நன்றிக் கடனுக்காக விலைபோய் தம் காலில் திடமாக நின்று உறுதியான முடிவுகளை தம் வழித்தோன்றல்களின் எதிர்கால நலனுக்காக எடுக்க முடியாதவர்களாகி பிறரிலேயே தங்கி வாழும் இழிநிலைக்கு தள்ளப்பட்டு என்றுமே முன்னேற்றம் காண முடியாத அடிமைத்தளையில் கட்டுண்டு வாழ்வார்கள்.
இதனை கவலையுடன் தன் முன் அனுபவத்தின் மூலம் கண்டறிந்த கட்டுரையாளரான திட்ட முன்மொழிவாளர் மக்களை பொருளாதாரத்தில் வளப்படுத்தி வேலைவாய்ப்புகளைப் பெற்ற அறிவு ஜீவிகளாக தம் காலில் திடமாக ஊன்றி நிற்கும் மக்களாக மாற்றும் தூரப் பார்வையுடனேயே கீழ்வரும் மன்னார் அபிவிருத்திக்கான திட்டங்களை மன்னார் அரசாங்க அதிபருக்கு முன்மொழிந்துள்ளார்.
இதை அங்கீகரித்து ஏற்போர் தனியாகவும் கூட்டாகவும் குறிப்பாக கிராம மட்ட அமைப்புக்களான கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாதர் சங்கங்கள் சன சமூக நிலையங்கள்,விளையாட்டு கழகங்கள் மீனவர் மற்றும் விவசாய அமைப்புககள் ஊடாக இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும்படி அதிகாரத் தரப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டுமென உணர்வு பூர்வமாக வேண்டி நிற்கின்றோம். இது சம்மந்தமாக மன்னார் அரசாங்க அதிபருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்கும் அனுப்பப்பட்ட முன்மொழிவுகள் கீழே தரப்படுகின்றன.
திட்ட முன்மொழிவு
தே.பி.சிந்தாத்துரை
சாவற்கட்டு
மன்னார்.
27.05.2015
அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளரும்
மாவட்டச் செயலகம்
மன்னார்.
ஐயா
மக்களின் நீண்ட காலத் தேவை என உணரப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்கான ஐந்தாண்டுத் திட்டம் - கச்சேரியால் தயாரிக்கப்படும் ஐந்தாண்டுத் திட்டத்துள் சேர்க்கப்படுவதற்காக
கடந்த காலங்களில் பல அபிவிருத்தித் திட்டங்களை இம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டதை நாம் அறிவோம். ஆயினும் மிகவும் முக்கியமான மக்கள் தேவையான சில வேலைத்திட்டங்கள் அபிவிருத்தி திட்டமிடல் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படாமை எமது துரதிஷ்டமே! அப்படி தவற விடப்பட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கான சில திட்டங்களை தங்கள் ஆலோசனைக்காகவும் கச்சேரியால் தயாரிக்கப்படும் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தில் உள்ளீர்க்கப்படுவதற்காகவும் கீழே விபரிக்கின்றோம்.
01. கட்டுக்கரைக்குள நீரேந்தும் பகுதியை ஆழப்படுத்துதல்
இது சம்பந்தமாக விபரமாக தயாரிக்கப்பட்ட முன்மொழிவு தங்களுக்கும் முருங்கன் நீர்ப்பாசன பொறியியலாளருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.. முருங்கன் நீர்ப்பாசன பொறியியலாளர் இத்திட்ட முன்மொழிவினை கட்டுக்கரைக்குள செயற்குழுவில்; ஆராய்ந்தபோது அக்குழுவினர் அத்திட்டத்தை பாராட்டி வரவேற்றதுடன்இ இதை நிறைவேற்றுவதற்கு தங்களாலான அனைத்து முயற்சி களையும் செய்வதாக உறுதியளித்தள்ளனர். அம்முடிவைத் தொடர்ந்து இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சாதக அறிக்கை முருங்கன் நீர்ப்பாசன பொறியியலாளரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.
02. மன்னார் நகரசபை எல்லைக்குள்ளும் சுற்றுப் புறத்திலுமுள்ள தாழ்நிலப் பகுதிகளை மண்மீட்பு செய்தல்
இத்திட்டம் மேற்படி 01ல் விபரிக்கப்பட்ட கட்டுக்கரை ஆழப்படுத்துதல் திட்டத்தினை ஓர் உபரி வினைபயனாகும். கட்டுக்கரைத் திட்டத்திற்கான சாத்திய அறிக்கை முருங்கன் நீர்ப்பாசன பொறியியலாளரிடமிருந்து கிடைக்கப்பெற்றதும்இ இவ்விடயம் மன்னார் நகர சபையினதும் நகர அபிவிருத்தி அதிகார சபையினதும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். இம்; முன்மொழிவு மன்னார் நகர சபைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு நகர சபைக் கூட்டத்திலும் ஆராயப்பட்டு ஏற்றுக்கொள்ளப் -பட்டுள்ளது.
03. பள்ளிமுனை மீனவர்களுக்கான படகோட்டும் கால்வாய் ஒன்றை அமைத்தல்
பள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகு மிதந்தோடக்கூடிய ஆழத்துக்கு செல்லும் ஓர் கால்வாயை அமைக்கும் திட்டம் இதுவாகும். நீண்ட காலமாக பள்ளிமுனை மீனவரால் உணரப்பட்ட இத்தேவை உடனடியாக நிறை வேற்றப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் பள்ளிமுனை கடற்கரையிலிருந்து படகு மிதக்கக்கூடிய கடல் ஆழப்பகுதி சுமார் 01 கிலோ மீற்றருக்கு அதிகமான தூரத்தில் இருப்பதால்இ மீன்பிடி லைகள்இ இயந்திரம் மற்றும் தேவையான உபகரணங்களை மீனவர்கள் தங்கள் தோளிலேயே சுமந்து செல்ல வேண்டியுள்ளது. ஏனெனில் பரவைக் கடலான இப்பகுதி ஆழமற்றும் கோடை காலத்தில் நீர்வற்றி வரண்ட நிலமாகவும் காணப்படும் பகுதியாக உள்ளது. இது அவர்கள் தினமும் அனுபவித்து அலுத்துக் களைக்கும் தொடர்ச்சியான நிகழ்வாகும். ஒரு நாள் பகற்பொழுது முழுவதும் அல்லது இரவு முழுவதும் கடலில் கஸ்டப்பட்டபின் திரும்பி வரும்போது அவர்கள் கொண்டு சென்ற வலைகள் இயந்திரங்கள் ஏனைய பொருட்களுடன் தம்மால் பிடிக்கப்பட்ட மீன்களையும் தோளில் சுமந்து கரைக்கு வரவேண்டிய களைப்புமிக்க கஸ்டமான உடல் அலுப்பைத்தரும் முயற்சியில் ஈடுபடவேண்டியுள்ளது. இவ்வலுப்பும் களைப்பும் இவர்களை அடுத்த நாள் தொழிலுக்கு செல்லமுடியாத தொழில் இழப்பை ஏற்படுத்துகிறது. கடலிலிருந்து கரைக்கு நடக்கும் நேரம் அநேக வேளைகளில் அவர்கள் கஸ்டப்பட்டு பிடித்த மீன்களை பழுதடையச் செய்துவிடுவதனால் அவர்களுடைய அனைத்து முயற்சிகளும் வீணாகி கால விரயத்தையும் நட்டத்தையும் ஏற்படுத்துகிறது. இவர்கள் காலம்காலமாக அனுபவித்துவரும் இத்துயரங்கள் அதிகாரத்தரப்புகளுக்கு நீண்டகாலமாக அறிவிக்கப்பட்ட போதிலும்இ கண்ட பயன் பூஜ்யமே.
இறுதியில் நகர அபிவிருத்தி சபை இவர்களது துயரத்தில் உதவ முன்வந்தது. இவர்கள் சில ஆரம்ப வேலைகளை முன்னெடுத்து 500 மீற்றர் தூரத்துக்கு வாய்க்கால் ஆழப்படுத்தற்கான ஒரு செலவு மதிப்பீட்டையும் தயாரித்துள்ளதாக அறியப்படுகிறது. ஆயினும் மேற்கொண்டு எதுவித முன்னேற்றமும் காணப்பட்டதாக தெpயவில்லை. எனவே இவ்விடயம் நகர அபிவிருத்தி சபையினதும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புகளுடனும் முனனெடுக்கப்பட வேண்டியுள்ளது. இத்திட்டம் மாவட்ட ஐந்தாண்டுத்திட்டத்துள் சேர்க்கப்படுமானால் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து இம்முயற்சியில் ஈடுபட ஊக்கம் வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.
இறுதியில் நகர அபிவிருத்தி சபை இவர்களது துயரத்தில் உதவ முன்வந்தது. இவர்கள் சில ஆரம்ப வேலைகளை முன்னெடுத்து 500 மீற்றர் தூரத்துக்கு வாய்க்கால் ஆழப்படுத்தற்கான ஒரு செலவு மதிப்பீட்டையும் தயாரித்துள்ளதாக அறியப்படுகிறது. ஆயினும் மேற்கொண்டு எதுவித முன்னேற்றமும் காணப்பட்டதாக தெpயவில்லை. எனவே இவ்விடயம் நகர அபிவிருத்தி சபையினதும் ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புகளுடனும் முனனெடுக்கப்பட வேண்டியுள்ளது. இத்திட்டம் மாவட்ட ஐந்தாண்டுத்திட்டத்துள் சேர்க்கப்படுமானால் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து இம்முயற்சியில் ஈடுபட ஊக்கம் வழங்கும் என எதிர்பார்க்கின்றோம்.
04. படகு நிர்மாணிக்கும் துறையும் இயந்திரம் பழுதுபார்க்கும் நிலையமும்
மன்னார் மீனவர் சமூகத்துக்கு மிகவும் அவசியமான இரு விடயங்களாகும். மன்னாரின் இரண்டாவது பாரிய தொழில் மீன்பிடி என்பது சகலரும் அறிந்த விடயமாகும். இங்கு மீனவ குடும்பங்களின் எண்ணிக்கை வேகமாகப் பெருகி வருவதுடன் அவர்களின் மீன்பிடி சாதனங்களுக்கான தேவையும் அதிகரித்தவண்ணமே உள்ளன. மீனவர்களின் மீன்பிடி முறைமை சம்மந்தமான அவர்களின் விருப்பத் தெரிவுக்கேற்ப மீன்பிடி உபகரணங்களின் மாதிரி அளவு போன்றன பலவிதத்தில் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தரமான படகு நிர்மாணிக்கும் தொழிற்சாலை மன்னாரில் இல்லாமையால் அவர்கள் அவற்றுக்காக தமது தொழில்துறைகளை விட்டு அதிக செலவுடன் தொழில் நேரத்தையும் விரயமாக்கி வேறு இடர்களுக்கும் குறிப்பாக நீர்கொழும்பு போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர். ஆகவே முறையாக நவீன சாதனங்களுடன் கூடிய ஓர்படகு நிர்மாணத் தொழிற்சாலையை அமைப்பது உடனடித் தேவையாகும். அதுபோல ஓர் இயந்திரம் திருத்தும் நிலையமும் பின்போடப்பட முடியாத சமாந்தரமான தேவையாகும்.
இவற்றை அரசாங்கம் செய்ய முடியாவிட்டால் இவ்விடயத்தில் தனியார் துறை ஊக்குவிக்கப்படவேண்டும். மாற்று வழியாக இதற்காக ஒரு கூட்டுறவுச் சங்கம் ஸ்தாபிக்கப்படலாம். மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசமும் இவிடயத்தில் ஆலோசனைக் கெடுத்துக் கொள்ளப்படலாம்.
05. யாழ் பல்கலைக் கழகத்தின் மீன்பிடி வளாகம் ஒன்று மன்னாரில் அமைக்கப்படல் வேண்டும்.
முன்னர் கூறியது போல மீன்பிடி மன்னார் மாவட்டத்தின் இரண்டாவது பாரிய தொழிலாகக் காணப்படுவதுடன்இ மீனவர் குடும்பத்தின் தொகையும் தொடர்ச்சியாக அதிகரித்தே வருகிறது. தற்போதைய கணிப்பின்படி மன்னார் மீனவர்களின் எண்ணிக்கை அண்ணளவாக 30இ000 ஆகும். இது தொடர்ந்து அதிகரிப்பதால் எதிர்கால மீனவ இளைஞர் சமுதாயம் மீன்பிடி பற்றிய நவீன முறைகளையும் தற்கால தொழில்நுட்ப நுணுக்கங்களையும் கற்றுத்தேறல் அவர்களது எதிர்கால நலன்களுக்கு உகந்ததாகும். ஆதலால் மன்னாரில் ஓர் பல்கலைக்கழக மீன்பிடி வளாகம் அமைக்கும் அவசியம் விதந்துரைக்கப்படுகிறது.
06. கடலட்டை பதனிடும் தொழிற்சாலை ஒன்று மன்னாரில் அமைக்கப்பட வேண்டும்
கடலட்டை பதனிடும் தொழிற்சாலை ஒன்று மன்னாரில் அமைக்கப்பட வேண்டும் என்பது மிகுந்த ஆர்வத்துடன் விதந்துரைக்கபடுகிறது. கடலட்டை பிடிப்பதில் மன்னார்மாவட்டம் வேறு எந்த மாவட்டத்துக்கும் இரண்டாம் பட்சமானதல்ல என்பது யாவரும் அறிந்ததே. மன்னாரில் பொருத்தமானஇ அங்கீகாரம் பெற்ற ஓர் அமைப்பு. நாளாந்தம் பிடிக்கப்படும் கடலட்டைகளை கொள்வனவு செய்யவும்இ பதப்படுத்தி ஏற்றுமதி செய்யவும் இல்லாததால் மன்னார் மீனவர்கள் தனியார் துறை வியாபாரிகளால் மிக மோசமாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே கடலட்டைகளை நியாய விலைக்க வாங்கவும்இ பதனிடவும் ஏற்றுமதி செய்யவும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் கூட்டுறவுச்சங்கம் உருவாக்கப்படுமானால்இ கடலட்டை தொழிலாளிகள் மிகவும் பயனடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
07. நவீன வசதிகளுடன்கூடிய அரிசி ஆலைகளை முருங்கனில் ஒன்றும் அடம்பன் பகுதியில் ஒன்றுமாக அமைத்தல்
இத்தேவை மிகவும் அவசியமானதாக சிந்திக்கப்படுகிறது. நாட்டில் அதிகமான நெல் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் மன்னாரும் ஒன்று என்பதும் மன்னாரின் மிகப்பெரிய தொழில் நெல் உற்பத்தி என்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும். முரண்பாட்டுக் கலவர காலத்தில் 15க்கும் அதிகமாக செயற்பட்ட அரிசி அலைகள் நிர்மூலமாக்கப்பட்டன. இவற்றுள் மாந்தைமேற்கு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தால் திருக்கேதீஸ்வரத்தில் இயக்கப்பட்ட அரிசி ஆலையும் ஒன்றாகும். இவ்வாலைகளில் பொருத்தப்பட்டிருந்த இயந்திரசாதனங்கள் அனைத்தும் கட்டிடங்களுடன் கூடவே அழிக்கப்பட்டிருப்பதால் இவற்றை மீண்டும் இயக்குவது முடியாத காரியமாகும். சில ஆலைச் சொந்தக்காரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுடன்தற்சமயம் இங்கு காணப்படுபவர்களும் போதிய நிதி வசதியில்லாததால் ஆலைகளை இயக்க முடியாதவர்களாக இருக்கின்றனர். 1960களில் இருந்ததுபோல நெல் உத்தரவாத விலைத் திட்டமும் இல்லாமையால் நெல் கொள்வனவுக்கான முறையான ஏற்பாடுகளும் உள்ளுரில் இல்லை. இதனால் நெல் உற்பத்தியாளர்கள் தமது நெல்லை தனியார் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கே விற்கவேண்டியுள்ளது. வெளியிலிருந்து வரும் தனியார் வியாபாரிகளால் வாங்கப்படும் நெல் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அரிசியாக்கப்பட்டு மன்னாருக்கு வியாபாரத்துக்காக திரும்பி கொண்டுவரப்படுகிறது. நுகர்வாளர் மட்டுமல்ல நெல் உற்பத்தியயாளரும் கூட அரிசிக்கு அதிகவிலை கொடுத்து வாங்கவேண்டியுள்ளது. இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தான் விளைவித்த நெல்லை குறைந்த விலைக்கு விற்ற உற்பத்தியாளன் அந்த நெல் அரிசியாக மாற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரும்போது தன் சொந்த உற்பத்திக்கே அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியவனாகிறான்.
ஆகையால் முன்கூறப்பட்டதுபோல இரண்டு அரிசி ஆலைகளை முருங்கனிலும்இ அடம்பன் பகுதியிலும்இ அரசு நிர்ணயிக்கின்ற விலைக்கே கொள்வனவு செய்யக்கூடிய வசதிகளுடன் நிறுவும்படி ஆலோசனை வழங்குகின்றோம். அதேவேளை மாந்தை மேற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் அரிசி ஆலையினை மீண்டும் இயங்கவைக்க நிதி உதவியை வழங்க ஆவண செய்யுமாறும் வேண்டுகின்றோம்.
08. விவசாய ஆராய்ச்சி நிலையம் ஒன்று மண் பரிசோதனை அலகுடன் இணைந்ததாக செயற்படுத்தல்
மேலும் ஓர் விவசாய ஆராய்ச்சி நிலையம் ஒன்று மண் பரிசோதனை அலகுடன் இணைந்ததாக ஏற்படுத்தும்படி வேண்டுகின்றோம். இத் தேவை பற்றி கடந்த காலங்களில் அக்கறையுள்ளவர்களால் அதிகமாக பேசப்பட்டுள்ளதால் அதிக விளக்கம் தேவையில்லை என்று கருதுகின்றோம். ஏற்கனவே முருங்கனில் இயங்கிவரும் இந்நிலையம் உரியவசதிகளுடன் புனரமைக்கப்படுதல் அவசியமானது.
09. முருங்கனில் ஓர் சீமெந்து தொழிற்சாலையையும் ஓட்டுத் தொழிற்சாலையையும் நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்தல்.
முருங்கனில் அபரிமிதமாக காணப்படும் களிமண் சீமெந்து உற்பத்திக்கு அத்தியாவசியமான ஓர் மூலப்பொருள் என்பதுடன் இம்மண் சீமெந்து உற்பத்திக்கு மிகவும் பொருத்தமானதுமாகும்.
நாட்டில் கலவர காலத்துக்கு முன் ஆயிரக்கணக்கான புகைவண்டி பெட்டிக் களிமண் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு ஏற்றிச் செல்லப்பட்டது அனைவரும் அறிந்த ஓர் விடயமாகும். இந்த மூலப்பொருளுடன் பரப்புக்கடந்தான் பகுதியில் பெருந்தொகையாக காணப்படும் சுண்ணக்கல்லையும் ஓர் மூலப்பொருளாக பயன்படுத்தி சிக்கனச் செலவுடன் உற்பத்தி செய்ய முடியுமா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். இவற்றை வெளியிடங்களுக்கு ஏற்றியனுப்பாது மன்னார் மாவட்டத்துள் அவற்றை பயன்படுத்துவதன் மூலம் பொருளாதார சிக்கனமான முறையில் சீமெந்து உற்பத்தி செய்யும் சாத்தியக்கூறுகளை ஓர் நிபுணத்துவ குழு மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டுமென்பதே எமது முன்மொழிவாகும். இதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து வாங்கும் பயனாளிகள் பயன் பெறும் வகையில் விற்கும் விலையையும் குறைக்க முடியும்.
அத்துடன் முருங்கனில் பெறப்படும் களிமண்ணைக் கொண்டு ஓர் ஓட்டுத் தொழிற்சாலையை பொருளாதார சிக்கனமான முறையில்இ அமைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்கறியவும் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
10. முழுமையான நவீனத்துவ வசதிகளுடன் ஒரு விளையாட்டடு மைதானத் தொகுதியை மன்னாரில் அமைத்தல் அவசியம்
எமது மன்னார் மாவட்டம் தேசிய மட்டத்தில் பல சாதனைகளை கடந்த காலங்களில் ஈட்டியுள்ளமை யாவரும் அறிந்ததாகும். விசேடமாக உதைபந்தாட்ட துறையில் இச்சாதனைகள் ஈட்டப்பட்டுள்ளன. மேலும் தேசிய மட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கு சிறந்த வீரர்கள் பலரையும் மன்னார் உருவாக்கித் தந்தள்ளது. உயர் ரக தொழில்நுட்பப் பயிற்சிகளோஇ தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் ஒன்றுதானும் இல்லாத நிலையிலும் இச்சாதனைகள் ஈட்டப்பட்டுள்ளன. மன்னார் நகரசபையால் பராமரிக்கப்படும் மன்னாரிலுள்ள ஒரே ஒரு பொதுவிளையாட்டு மைதானம் கூட ஓர் உள்ளுர் மட்ட போட்டியைத்தானும் நடாத்தப் பொருத்தமும் தரமும் அற்றதாகவே காணப்படுகிறது. ஏனெனில் இது தாழ்நிலப் பகுதியைக் கொண்டதாகவும் மட்டுப்படுத்தப் படாததாகவும் உள்ளது.
ஒரு சிறு மழையுடன் இம்மைதானம் நீர் தேங்கியதாகக் காணப்படுகிறது. இம்மைதானத்தில் ஒரு 440 ஓடுபாதை அமைக்கமுடியாத குறை நீண்ட காலமாக விளையாட்டு வீரர்கள் மத்தியில் காணப்படுகிறது. இம்மைதானத்தை பொருத்தமான ஓர் இடமாக அமைத்துத்தரும்படி நீண்ட காலமாக விளையாட்டுத் துறையில் அக்கறை உள்ளவர்களால் அழுத்தம் கொடுக்கபட்ட கோரிக்கைகள் அதிகாரத்தரப்பால் இன்றுவரை கவனத்துக் கெடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
இருந்த போதிலும் 2012ல் அரசாங்கம் ஓர் விளையாட்டு மைதானத் தொகுதியை மன்னார் நகரில் உள்ள எமில் நகரில் அமைக்க மைதானம் ஒன்றை அடையாளம் கண்டது. இதை அறிந்த மக்களும் விளையாட்டு வீரர்களும் பாரிய நிவாரணம் கிடைத்துள்ளதாக திருப்தியடைந்தபோது திடீரென அரசாங்கத்தால் மன்னார் நகர மத்தியிலமைந்திருந்த எமில் நகரில் அமைக்கப்படவிருந்த விளையாட்டுத் தொகுதி தாராபுரம் கிராமத்துக்கு அரசியல் தலையீடு காரணமாக மாற்றப்பட்டிருப்பதான அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளிவந்தது. கண்டனங்களும் எதிர்ப்புகளும் காட்டப்பட்டு மன்னாரில் உயர் சமூக அந்தஸ்து கொண்ட ஒரு குழுவினர் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி தொடரச்சியாக மேற்கொண்ட கடித பரிமாற்றங்களின் பின் இறுதியாக இம்மைதானம்இ முன்னரே தெரிவு செய்யப்பட்ட எமில் நகரிலேயே அமைக்கப்படும் என்றும் 2013 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளரால் உறுதி செய்யப்பட்டது. எனினும் எமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இதுவரை எதுவித முன்னேற்றமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மன்னார் மக்கள் இரண்டும் கெட்ட நிலையிலும் திரும்பவும் அரசியல் தலையீடு காரணமாக இடமாற்றம் நடந்துவிடுமோ எனவும் குழப்பத்தில் உள்ளார்கள். எனவே இத்திட்டத்தினை ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்துள் உள்வாங்குமாறு ஆலோசனை வழங்குகின்றோம்.
ஒரு சிறு மழையுடன் இம்மைதானம் நீர் தேங்கியதாகக் காணப்படுகிறது. இம்மைதானத்தில் ஒரு 440 ஓடுபாதை அமைக்கமுடியாத குறை நீண்ட காலமாக விளையாட்டு வீரர்கள் மத்தியில் காணப்படுகிறது. இம்மைதானத்தை பொருத்தமான ஓர் இடமாக அமைத்துத்தரும்படி நீண்ட காலமாக விளையாட்டுத் துறையில் அக்கறை உள்ளவர்களால் அழுத்தம் கொடுக்கபட்ட கோரிக்கைகள் அதிகாரத்தரப்பால் இன்றுவரை கவனத்துக் கெடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
இருந்த போதிலும் 2012ல் அரசாங்கம் ஓர் விளையாட்டு மைதானத் தொகுதியை மன்னார் நகரில் உள்ள எமில் நகரில் அமைக்க மைதானம் ஒன்றை அடையாளம் கண்டது. இதை அறிந்த மக்களும் விளையாட்டு வீரர்களும் பாரிய நிவாரணம் கிடைத்துள்ளதாக திருப்தியடைந்தபோது திடீரென அரசாங்கத்தால் மன்னார் நகர மத்தியிலமைந்திருந்த எமில் நகரில் அமைக்கப்படவிருந்த விளையாட்டுத் தொகுதி தாராபுரம் கிராமத்துக்கு அரசியல் தலையீடு காரணமாக மாற்றப்பட்டிருப்பதான அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளிவந்தது. கண்டனங்களும் எதிர்ப்புகளும் காட்டப்பட்டு மன்னாரில் உயர் சமூக அந்தஸ்து கொண்ட ஒரு குழுவினர் அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தி தொடரச்சியாக மேற்கொண்ட கடித பரிமாற்றங்களின் பின் இறுதியாக இம்மைதானம்இ முன்னரே தெரிவு செய்யப்பட்ட எமில் நகரிலேயே அமைக்கப்படும் என்றும் 2013 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் விளையாட்டு அமைச்சின் செயலாளரால் உறுதி செய்யப்பட்டது. எனினும் எமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இதுவரை எதுவித முன்னேற்றமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மன்னார் மக்கள் இரண்டும் கெட்ட நிலையிலும் திரும்பவும் அரசியல் தலையீடு காரணமாக இடமாற்றம் நடந்துவிடுமோ எனவும் குழப்பத்தில் உள்ளார்கள். எனவே இத்திட்டத்தினை ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்துள் உள்வாங்குமாறு ஆலோசனை வழங்குகின்றோம்.
11. சந்தைத் தொகுதியும் நகர விஸ்தரிப்புத் திட்டமும்
மன்னாரின் தலைநகரமான மன்னார் பட்டினப் பகுதிக்குள் ஒருவர் நுழைவாராயின் அவர் உடனடியாக காணும் காட்சி தகர கொட்டகைகளால் வரிகையாக எதுவித ஒழுங்குமுறைகளும் இன்றி அலங்கோலமாக அமைந்துள்ள கடைகளேயே காண்பார். இது ஓர் அருவருக்கத்தக்க காட்சியாக அமைவதோடு மன்னார் மக்களை ஓர் அழகுணர்ச்சியோ, ஒழுங்கு முறையோ இல்லாத மக்களாகவே பிறரை எண்ணவைக்கும். இதன் மூலம் எங்கள் மாவட்ட தலை நகரத்தின் பரிதாப நிலையையிட்டு நாம் அவமானமடைகின்றோம். இப்பரிதாப நிலைமையிட்டு எமது தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளோ மன்னாரின் முன்னோடி பிரஜைகளோ எதுவித நடவடிக்கையும எடுக்காதது பரிதாபத்திற்குரிய ஓர் நிகழ்வாகும்.
ஆகையினால் நாங்கள் இவ்வசிங்கமான காட்சியைத் தரும் குப்பைகளை அகற்றி இரண்டு அல்லது மூன்று மாடிக்கட்டிடங்களைக் கொண்டு அமையும் ஓர் உயர் சந்தைத் தொகுதி கட்டிடங்கள் மூலம் மீளமைக்க நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்க வேண்டும். இவ்வுயர் சந்தைத் தொகுதி மன்னாரில் பெருகிவரும் வியாபாரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் காணி பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் உதவும். இது மன்னாரில் நடைபாதை வியாபாரத்தால் ஏற்படும் பிரச்சினைகளையும் இல்லாதொழிந்கும். இந்த நடைபாதை வியாபாரங்களும் இச்சந்தைத் தொகுதியுள் உள்ளடக்கப்படலாம். கட்டிட நடைமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களையும் அகற்ற உதவும்.
ஆகையினால் நாங்கள் இவ்வசிங்கமான காட்சியைத் தரும் குப்பைகளை அகற்றி இரண்டு அல்லது மூன்று மாடிக்கட்டிடங்களைக் கொண்டு அமையும் ஓர் உயர் சந்தைத் தொகுதி கட்டிடங்கள் மூலம் மீளமைக்க நடவடிக்கை எடுப்பதுபற்றி ஆலோசிக்க வேண்டும். இவ்வுயர் சந்தைத் தொகுதி மன்னாரில் பெருகிவரும் வியாபாரங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் காணி பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் உதவும். இது மன்னாரில் நடைபாதை வியாபாரத்தால் ஏற்படும் பிரச்சினைகளையும் இல்லாதொழிந்கும். இந்த நடைபாதை வியாபாரங்களும் இச்சந்தைத் தொகுதியுள் உள்ளடக்கப்படலாம். கட்டிட நடைமுறைகளை மீறி அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களையும் அகற்ற உதவும்.
இத்துடன் சமாந்திரமாக நோக்க வேண்டிய விடயம் மன்னார் நகர விஸ்தரிப்பாகும். இது சம்மந்தமாக நகர அபிவிருத்தி அதிகார சபை தொடர்ச்சியான பல கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒரு நகர அபிவிருத்தி திட்டத்தையும் தயாரித்திருந்தது. புதிய நகரம் அமைத்தல் புதிய பெருந்தெருக்கள், மேலதிக பேரூந்து நிலையம் போன்ற பலவும் இத் திட்டத்துள் உள்ளடக்கப்பட்டிருந்தன. ஆனால் இத்திட்டம் வெளிவந்து செயற்படாமை மக்களுக்க பாரிய ஏமாற்றமாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து முன்னெடுக்கும்படி நகர அபிவிருத்தி அதிகார சபை ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆகையால் தயாரிக்கப்படவுள்ள ஐந்தாண்டுத் திட்டத்தில் இத்திட்டம் உள்ளடக்கப்படுதல் பொருத்தமானது என்றும் அபிப்பிராயம் முன்வைக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து முன்னெடுக்கும்படி நகர அபிவிருத்தி அதிகார சபை ஊக்குவிக்கப்பட வேண்டும். ஆகையால் தயாரிக்கப்படவுள்ள ஐந்தாண்டுத் திட்டத்தில் இத்திட்டம் உள்ளடக்கப்படுதல் பொருத்தமானது என்றும் அபிப்பிராயம் முன்வைக்கப்படுகிறது.
ஜெயிக்கா நிறுவனத்தால் மன்னார் பாலமும் இணைப்பு வீதியும் அமைக்கப்பட்ட காலப்பகுதியில் அவ்வேலைக்கான கட்டிட பொருட்களை களஞ்சியப்படுத்த பாலத்தின் பக்கமாகவிருந்த சிறு பரவைக் கடல்பகுதி பயன்படுத்தப்பட்டது. வேலை முடிவில் இப்பகுதி பயன்படுத்தப்படக்கூடிய ஓர் உறுதியான காணித்துண்டாக மாற்றம் பெற்றது. இந்நிலப்பகுதி மக்களுக்கான ஓய்வு நேர பொழுதுபோக்கு பூங்காவாக மாற்றி அமைக்கப்பட மிகவும் பொருத்தமானதாக காணப்படுகிறது.
இதற்கென ஓர் திட்டமும் நன்கு வடிவமைத்த ஓர் வரைபடமும் மன்னார் நகர சபையிடம் தயாரித்து வழங்கப்பட்டது. ஆனால் வனவிலங்குத் திணைக்களம் இவ்விடத்துக்கு உரிமை கோரியதால் திட்ட நடைமுறை செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டது. இதுபற்றிய கடிதப் போக்குவரத்துக்கள் நடைபெற்றன எனினும் நகர சபையின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இத் திட்டமும் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்துள் சேர்க்கப்படுவது சாலவும் பொருத்தமானது.
இதற்கென ஓர் திட்டமும் நன்கு வடிவமைத்த ஓர் வரைபடமும் மன்னார் நகர சபையிடம் தயாரித்து வழங்கப்பட்டது. ஆனால் வனவிலங்குத் திணைக்களம் இவ்விடத்துக்கு உரிமை கோரியதால் திட்ட நடைமுறை செயற்பாடுகள் தாமதப்படுத்தப்பட்டது. இதுபற்றிய கடிதப் போக்குவரத்துக்கள் நடைபெற்றன எனினும் நகர சபையின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே இத் திட்டமும் ஐந்தாண்டு அபிவிருத்தித் திட்டத்துள் சேர்க்கப்படுவது சாலவும் பொருத்தமானது.
அத்துடன் தற்போதைய மீன் சந்தையின் பின்புறமாகவும் ஓர் விசாலமான நிலப்பரப்பு காணப்படுகிறது. இவ்விடமும் மன்னார் நுழை வாயிலில் அமைந்து பயன்பாடு ஏதுமின்றி ஓர் அசிங்கமான தோற்றத்துடன் காணப்படுகிறது. இவ்விடமே முன்னர் மக்கள் பொழுது போக்கு பூங்காவாக்க ஆலோசணையிலிருந்தது. இப்பூங்கா புதிதாக உருவாகிய காணியில் அமைக்க உத்தேசம் இருப்பதால் இவ்விடத்தில் ஓர் மூன்று நட்சத்திர ஹோட்டலை அமைத்து அத்துடன் இணைந்ததாக நீச்சல் வசதிகள், மற்றம் பொழுதுபோக்கு படகோட்டும் வசதிகளும் ஏற்படுத்தப்படலாம். இப்படியாக ஓர்திட்டம் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதுடன் சுற்றுலா பிரயாணிகளையும் கவர்ந்திழுப்பதாக அமையும்.
12. சன நெருசலை போக்குவதற்கு தொடர் மாடி வீடுகளை அமைத்தல்
முன்னர் மன்னார் பட்டினத்திற்கு குடிநீர் வழங்குவதற்காகஇ குடிநீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபையால் மன்னார் பட்டின எல்லையுள் பயன்படுத்தப்பட்ட சுமார் 200 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட காணியொன்று உள்ளது. குடிநீர் விநியோக நீர்வளப் பிரதேசம் சில வருடங்களுக்கு முன் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதால் இக்காணி பயன்பாடின்றி கிடக்கின்றது. கைவிடப்பட்ட நிலமாக இப்பகுதி காணப்படுவதால் இதனை அத்துமீறி அதிகாரமற்றவர்கள் கைப்பற்றக்கூடிய ஓர் ஆபத்து உண்டு. இக்காணி நீர் விநியோக அதிகார சபைக்கு பாரப்படுத்தப்பட்டதாகக் காணப்படுகிறது. ஆகவே நகர விஸ்தரிப்பு அபிவிருத்திக்காக இக்காணி யை மன்னார் நகர சபைக்கு மீளப் பாரப்படுத்தும்படி நீர் விநியோக சபையினைக் கோரவேண்டும் என்பது எமது ஆலோசனையாகும்.
சுமார் ஒரு வருடத்துக்கு முன் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டதன்பேரில் ஓர் உயர் அதிகாரி இக்காணியைப் பார்வையிட்டு இத்திட்டத்துக்கு இக்காணி மிகவும் பொருத்தமானதெனவும் கூறினார். அப்போது மன்னார் புகையிரத நிலையத்தையும்இ புதிய பேரூந்து நிலையத்தையும் மன்னார் போக்குவரத்து சாலைக்கு அருகில் அமைத்து அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச நெடுஞ்சாலையினை இப்பகுதியூடாக அமைக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இவ்விடத்தில் புதிய நகரத்தை அமைத்து குடியிருப்பு தொடர்மாடிகளையும் அமைத்துஇ அங்கு வீடற்றவர்களையும் காணியற்றவர்களையும் குடியமர்த்தலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
சுமார் ஒரு வருடத்துக்கு முன் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்பு கொண்டதன்பேரில் ஓர் உயர் அதிகாரி இக்காணியைப் பார்வையிட்டு இத்திட்டத்துக்கு இக்காணி மிகவும் பொருத்தமானதெனவும் கூறினார். அப்போது மன்னார் புகையிரத நிலையத்தையும்இ புதிய பேரூந்து நிலையத்தையும் மன்னார் போக்குவரத்து சாலைக்கு அருகில் அமைத்து அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச நெடுஞ்சாலையினை இப்பகுதியூடாக அமைக்கலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இவ்விடத்தில் புதிய நகரத்தை அமைத்து குடியிருப்பு தொடர்மாடிகளையும் அமைத்துஇ அங்கு வீடற்றவர்களையும் காணியற்றவர்களையும் குடியமர்த்தலாம் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இத்திட்டமும் தயாரிப்பில் உள்ள ஐந்தாண்டு அபிவிருத்தி திட்டத்துள் உள்வாங்கப்படலாம் எனக் கோரப்படுகிறது.
13. அகத்திமுறிப்புக் குள வேலை
இக்குளம் எல்லாக் காலத்திலும் நீரின்றி வரண்டே காணப்படுகிறது. அருவி ஆற்றின் மேலதிக நீர் இக்குளத்தின் அருகாமையிலேயே பாய்ந்து கழிவு நீராக கடலுக்குச் செல்கின்றது. இந்நீரை மறித்து இக்குளத்துக்கு திருப்ப முடியும் என்பதை ஆய்வு செய்யும்படி கோருகின்றோம். இபபகுதி விவசாயிகளுக்கு இது பயனுள்ளதாக அமையும். எனவே இத்திட்டமுட் ஐந்தாண்டுத் திட்டத்துள் சேர்க்கப்படவேண்டும் எனக் கோருகின்றோம்.
இத்திட்ட முனமொழிவுகள் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்படுமானால், அவற்றை அமுல்படுத்த எமது முழுமையான ஆதரவுயும் பங்களிப்பையும் செய்து அமுலாக்கப் பங்காளிகளாக நாம் செயற்படுவோம் என்பதை உறுதிப்படுத்துகின்றோம். சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து பணியாற்றவும் நாம் ஆயத்தமாகவுள்ளோம். இம் முன்மொழிவுகள் முழுமையாக நிறைவேற்றப்படுமானால் எதிர்வரும் 5 ஆண்டு காலப்பகுதியுள் மக்களின் தொழில் வாய்ப்பும் பொருளாதார செழிப்பும் பாரியளவில் முன்னேற்றமடையும் என்பதுடன் ''பின் தங்கிய மாவட்டம்' என்ற மன்னாரின் அவப்பெயரும் நிங்கிவிடும் என உறுதியாக நம்புகின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
தங்கள் உண்மையுள்ள
தே.பி.சிந்தாத்துரை
பிரதிகள்:
01. பிரதேச செயலாளர்கள் -மன்னார் மாந்தைமேற்கு நானாட்டான் முசலி மடு.
02. நீர்ப்பாசன பொறியியலாளர் - (மத்தி) முருங்கன் முன்மொழிவு 01, 13
(மாகாணம்) மன்னார். சம்மந்தமாக
03. உதவிப் பணிப்பாளர்இ மீன்பிடி மன்னார் - முன்மொழிவு 03 04, 05, 06 சம்பந்தமாக
04. கமநல உதவிடிப்பணிப்பாளர்இ மன்னார் - முன்மொழிவு 01, 07,
05. விவசாய உதவிப் பணிப்பாளர், மன்னார். 08 சம்பந்தமாக
05. நகர அபிவிருத்திச் சபை,நகரசபை முன்மொழிவு 02,10,11,
06. மன்னார் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் 12 சம்மந்தமாக
07. கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் - முன்மொழிவு 04,06,07, சம்மந்தமாக
வளமான மன்னாருக்கு எதிர்கால திட்டமிடல்
Reviewed by NEWMANNAR
on
July 13, 2015
Rating:

No comments:
Post a Comment