எய்ட்ஸ் பாதித்த 2 குழந்தைகளின் மறுவாழ்வுக்கு உதவிய அப்துல்கலாம்,

ஒடிஸா மாநிலத்தை சேர்ந்த எய்ட்ஸ் பாதித்த 2 குழந்தைகளின் மறுவாழ்வுக்கு அப்துல் கலாம் செய்த உதவி தெரியவந்துள்ளது.
ஒலாவர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் கூறுகையில், கடந்த 2005-ம் ஆண்டு யூன் மாதம் அப்போதைய குடியரசுத் தலைவர் கலாமிடம் இருந்து எனக்கு கடிதமும், ரூ.20 ஆயிரத்துக்கு வரைவோலையும் வந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாகி எனது தாயும் தந்தையும் இறந்துவிட்ட நிலையில், எச்ஐவி தொற்று இருந்த எனது தம்பி, தங்கையை காப்பாற்ற உதவுமாறு கேட்டு கலாமுக்கு கடிதம் எழுதியிருந்தேன்.
கலாமின் உதவிக்குப் பிறகு முதல்வர் அலுவலகமும் ரூ. 20 ஆயிரம் நிதி அளிக்க முன்வந்தது.
எனது தம்பி, தங்கைக்கு அரசின் மருத்துவ கவனிப்பும் கிடைத்தது. கடந்த 10 ஆண்டுகளில் எனது தம்பியும் தங்கையும் எய்ஸ்ட்க்கு எதிரான போரில் வெற்றி பெற்றுள்ளனர்.
உரிய நேரத்தில் கலாம் தலையிட்டதால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது.
கலாம் மறைவை எனது குடும்பத்தில் ஒருவரை இழந்ததாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
எய்ட்ஸ் பாதித்த 2 குழந்தைகளின் மறுவாழ்வுக்கு உதவிய அப்துல்கலாம்,
Reviewed by Author
on
July 30, 2015
Rating:

No comments:
Post a Comment