தமிழ் தேசியத்தினை கட்டிக்காக்கவேண்டிய காலப்பொறுப்பு எமது கரங்களில் உள்ளது.- இ.சாள்ஸ் நிர்மலநாதன்-Photos
தமிழ் தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக நேரடிவேட்பாளாராக இலக்கம் 3ல் போட்டியிடும் திரு.இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் மூன்றாம்பிட்டி கிராம மக்களை சந்தித்து உரையாடிய போது, அரசியல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஏற்படும் அடிமை தனம் ஓர் இனத்தின் அனைத்து அடையாளங்களையும் அழித்துவிடுமென்பது உலக வரலாறு.
மிடுக்குடன் வாழவேண்டிய ஈழத்தமிழன் அற்ப சலுகைகளுக்காக பிச்சை பாத்திரமேந்தும் பரிதாப நிலை மாற்றப்பட வேண்டும். தமிழ் தேசியத்தை அதன் பெறுமதியான அடையாளத்தை சுவடு தெரியாமல் எமது எதிரி மட்டும் அழிக்கவில்லை, தமிழனாய் பிறந்த சில ஈனப்பிறவிகளும் அழித்துக்கொண்டேருக்கிறார்கள். இவர்களின் கடைகெட்ட அடிவருடித்தனம், அயோக்கியத்தனம் எஞ்சியிருக்கும் எமது மக்களின் மீதி இருப்பையும் அழிப்பதற்கு எந்த வடிவத்திலும் இன மானமுள்ள எந்த ஈழத்தமிழனும் இடங்கொடுக்கக்கூடாது.
தமிழ் தேசியத்தினை கட்டிக்காக்கவேண்டிய காலப்பொறுப்பு எமது கரங்களில் உள்ளது. காலத்தின் வலிமை தேவையறிந்து தமிழ் தேசிய உணர்வோடு அனைவரும் தவறாமல் வீட்டு சின்னத்திற்கு வாக்களியுங்கள். தமிழ் தேசியத்தை பாதுகாப்போம் என மக்கள் மத்தியில் உரையாடினார்.
தமிழ் தேசியத்தினை கட்டிக்காக்கவேண்டிய காலப்பொறுப்பு எமது கரங்களில் உள்ளது.- இ.சாள்ஸ் நிர்மலநாதன்-Photos
Reviewed by NEWMANNAR
on
July 28, 2015
Rating:

No comments:
Post a Comment