கெரின் லங்காவின் மன்னார் வளைகுடா எரிபொருள் ஆய்வுப்பணி முடிவுறுகிறது
இலங்கை அரசாங்கத்துக்கும் கெரின் இந்தியா நிறுவனத்தின் கீழ் வரும் கெரின் லங்கா நிறுவனத்துக்கும் இடையில் மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய அகழ்வு தொடர்பில் நடைமுறையில் இருந்து வந்த உடன்படிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
இந்தநிலையில் மன்னார் வளைகுடாவில் எரிபொருள் அகழ்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான புதிய சர்வதேச நிறுவனம் ஒன்றுக்கு வாய்ப்பளிப்பது என்று இலங்கையின் அமைச்சரவையும் தீர்மானித்துள்ளது.
கெரின் லங்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் 2008ஆம் ஆண்டு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.
இந்தநிலையில் இரண்டு கிணறுகளில் இயற்கை வாயு இருப்பதை கெரின் லங்கா கண்டுபிடித்தது. இதன்மூலம் 60 பில்லியன் கியுபிக் மீற்றர் இயற்கை வாயுவை பெற்றுக்கொள்ளமுடியும் என்று மதிப்பிடப்பட்டது.
இதனை கண்டுபிடிப்பதற்காக கெரின் லங்கா 230 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது
கெரின் லங்காவின் மன்னார் வளைகுடா எரிபொருள் ஆய்வுப்பணி முடிவுறுகிறது
Reviewed by NEWMANNAR
on
July 10, 2015
Rating:

No comments:
Post a Comment