அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகள் 45 பேர் நாடு திரும்பினர்!


இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகளில் மேலும் 45 பேர் நேற்று இலங்கைக்கு திரும்பினர்.

இவர்கள் திருச்சி, திண்டுக்கல், கன்னியாக்குமரி, விலுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கா, புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வெலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய இடங்களில் தங்கியிருந்தவர்களாவர்.

இவர்கள் தொடர்பில் எவ்வித குற்றச்செயல் முறைப்பாடுகளும் இல்லை என்று முகாம் அதிகாரிகள் உறுதிப்படுத்தியமையை அடுத்தே 45 பேரும் நேற்று இலங்கை நோக்கி திருச்சியின் ஊடாக புறப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் ஏற்கனவே கடந்த மேமாதத்தில் 41பேரும் கடந்த மாதத்தில் 46பேரும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அகதிகள் 45 பேர் நாடு திரும்பினர்! Reviewed by NEWMANNAR on July 29, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.