தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லையேல் அனைவரும் சிங்களவர்களாகியிருப்பார்கள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சி ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் அன்று மேல்மாகாணத்தில் உள்ள நீர்கொழும்பு, சிலாபம் போன்ற இடங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று சிங்களவர்களாக போனதைப்போன்று இன்று இந்த நாட்டில் உள்ள வடகிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் சிங்களவர்களாகப் போயிருப்பார்கள்.
என கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழரசுக்கட்சியின் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான தவராசா கலையரசன் கூறினார்.
இன்று மாலை 5.30 மணியளவில் செல்வப்பிரகாஸ் தலைமையில் அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு இம்முறை நாடாளுமன்ற வேட்பாளர்களான த.கலையரசன், வை.கோபிகாந் மற்றும் காரைதீவு பிரதேசசபையின் உறுப்பினர் எஸ்.பாஸ்கரன், த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர் சிறில் கல்முனை மாநகரசபையின் உறுப்பினர்களான எஸ்.கமலதாசன், எஸ்.ஜெயக்குமார், முன்னாள் நாவிதன்வெளி பிரதேசசபையின் உறுப்பினர்களான தேவன், மற்றும் கிராமத்து பெரியார்கள், இளைஞர்கள், தாய்மார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லையேல் அனைவரும் சிங்களவர்களாகியிருப்பார்கள்!
Reviewed by NEWMANNAR
on
July 29, 2015
Rating:

No comments:
Post a Comment