தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் மன்னாரில் கைது
வவுனியா – மன்னார் வீதியில் பொது தேர்தலுக்கான வேட்பாளர்களின் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த 05 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக சுவரொட்டிகளை ஒட்டிய இவர்கள் நேற்று இரவு கைது செய்ததாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொது தேர்தலுக்கான குறித்த காலப்பகுதிக்குள் 36 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் முறைப்பாடு தொடர்பில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் மன்னாரில் கைது
Reviewed by NEWMANNAR
on
July 17, 2015
Rating:

No comments:
Post a Comment