அண்மைய செய்திகள்

recent
-

த.தே. கூட்டமைப்பு - அமெரிக்க உதவிச் செயலாளர் சந்திப்பு


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பீஷ்வாலுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது,  தேர்தலுக்கு பின்னரான அரசியல் நிலைமைகள் தொடர்பில் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் கடந்த தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தமிழ் மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்குதல், காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கொழும்பில் இன்று சுமார் ஒன்றறை மணித்தியாலங்கள் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள சர்வதேச விசாரணை அறிக்கை குறித்தும் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
த.தே. கூட்டமைப்பு - அமெரிக்க உதவிச் செயலாளர் சந்திப்பு Reviewed by Author on August 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.