கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது...
தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஜீப்.ஏ.மஜீத் இன்று புதன்கிழமை கிண்ணியாவில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் அரச அதிகாரியை அச்சுறுத்தியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நஜீப்.ஏ.மஜீத்தை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்.
பிந்திக்கிடைத்த தகவலின் படி நஜீப்.ஏ.மஜீத் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் கைது...
Reviewed by Author
on
August 06, 2015
Rating:

No comments:
Post a Comment