தேர்தல் தொடர்பில் அமெரிக்கா வாழ்த்து,,,
இலங்கையில் நடைபெற்று முடிந்த தேர்தல் ஜனநாயக ரீதியிலும் சட்டதிட்டங்களுக்கமைவாகவும் நடைபெற்றது தொடர்பில் அமெரிக்கா தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசாங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஜோன் கர்பி நேற்று (18) வொஷிங்டனில் நடைபெற்ற தினசரி செய்தியாளர் மாநாட்டின் போது இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர், இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற தேர்தல்களில் மிகவும் அமைதியான தேர்தல் இது எனக் குறிப்பிடலாம். தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கும் சிவில் சமூகத்திற்கும் வேட்பாளர்களுக்கும் அமெரிக்கா தனது பாராட்டுகளைத் தெரிவிக்கின்றது என்றார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் உள்ளிட்ட புதிய அரசுடன் தாங்கள் நல்லுறவுடன் செயற்படவுள்ளதாகவும் அமெரிக்க அரசாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேர்தல் தொடர்பில் அமெரிக்கா வாழ்த்து,,,
Reviewed by Author
on
August 19, 2015
Rating:

No comments:
Post a Comment