அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்...

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br /></div>
வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்­தி­ருக்­கின்ற நம்­பிக்­கை­யையும் உறு­தி­யையும் மீண்டும் நிரூ­பித்­துள்­ளனர். அவர்­களின் நம்­பிக்­கை­யையும் விசு­வா­சத்­தையும் எப்­பொ­ழுதும் நாம் காப்­பாற்­றுவோம். நன்றி கூறவும் கட­மைப்­பட்­டுள்ளோம்.என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரிவித்தார். "

தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற் றுள்ள வெற்றி தொடர்பில் கேசரியுடன் கருத்து பகிர்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்; வடக்கு கிழக்கு மக்கள் எம்­மீது கொண்ட நம்­பிக்­கையை மீண்டும் உலகம் அறிய நிரூ­பித்­துள்­ளார்கள். அவர்­க­ளுக்கு நன்றி தெரி­விக்க நாம் கட­மைப்­பட்­ட­வர்கள்.

அவர்களின் நம்­பிக்­கையை எப்­பொ­ழுதும் நாம் காப்­பாற்­றியே தீருவோம். வடக்கு கிழக்கில் போட்­டி­யிட்ட மக்கள் செல்­வாக்­கற்ற சில கட்­சி­களின் விஷ­மத்­த­ன­மான பிர­சா­ரத்­தி­னாலும் நட­வ­டிக்­கை­ளி­னாலும் நாம் அடையவிருந்த இன்னும் பெரிய பாரிய வெற்றி அக்­கட்­சி­களால் தடைப்­பட்­டு­விட்­டது. நாம் அக்­கட்­சி­களை தமிழ் மக்­களின் நன்மை கருதி தேர்தலில் இருந்து விலகுமாறு கோரினோம். அவர்கள் அதை செய்­ய­வில்லை. இன்று அவர்கள் எமது மக்­களால் புறக்­க­ணிக்­கப்­பட்­டுள்­ளனர்.

நடை­பெற்ற பாரா­ளு­மன்றத் தேர்­தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வெற்­றியைப் பெற்­றுள்­ளது. பெறப்­பட்ட ஆச­னங்­களின் எண்­ணிக்கை எதிர்­பார்த்­த­திலும் பார்க்க சற்று குறை­வாக இருந்த போதிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மீது வைத்­தி­ருக்­கின்ற நம்­பிக்­கை­யையும் உறு­தி­யையும் மீண்டும் நிரூ­பித்­துள்­ளனர். தமிழ்க் கூட்டமைப்பை வட – கிழக்கு மக்கள் தங்­க­ளு­டைய நம்­பிக்­கைக்­கு­ரிய பிர­தி­நி­தி­யாக இத்­தேர்­தலில் தெரிவு செய்­தி­ருக்­கின்­றார்கள். இதில் எவ்­வித சந்­தே­கத்­துக்கும் இட­மில்லை. துர­திஷ்­ட­வ­ச­மாக தேர்­த­லுக்கு முன்­பாக சில விஷமத் தன­மான பிர­சா­ரங்கள் எம்­மீது மேற்­கொள்­ளப்­பட்­டன. துண்டுப் பிர­சு­ரங்கள் விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

இது எமது வெற்றி வாய்ப்பில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. எமது செயற்­பாட்டைப் பொறுத்­த­வரை அர­சியல் தீர்வு விட­யத்தில் கால தாமதம் செய்­யாமல் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டு­மென்­பது கூட்­ட­மைப்பின் முக்­கி­ய­மா­னதும் உறு­தி­யா­னது­மான நிலைப்­பா­டாகும். இது விடயம் குறித்து எடுக்க வேண்­டிய முயற்­சி­களை இனி வேக­மாக மேற்­கொள்வோம்.

எம்மை பொறுத்தவரையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்­களால் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக புதிதாக அமை­ய­வி­ருக்கும் அர­சாங்கம் இருக்க வேண்டும். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு மக்­களால் வழங்­கப்­பட்ட ஆணையை தொடரும் வகையில் அமை­ய­வி­ருக்கும் அர­சாங்கம் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்டும்.

அவ்­வி­த­மான நிலை­மைக்கு நாங்கள் ஆத­ர­வாக இருப்­போ­மென்று கூற முடியும். அமை­ய­வி­ருக்கும் புதிய அர­சாங்­க­மா­னது தமிழ் மக்­களின் நீண்­ட­காலப் பிரச்­சி­னைக்குத் தீர்க்­க­மான ஒரு அர­சியல் தீர்வை கொண்டு வரு­வ­தற்கு கடு­மை­யான காத்­தி­ர­மான முயற்­சி­களை கால­தா­மதம் இன்றி மேற்­கொள்ள வேண்­டு­மென்­பது எமது எதிர்­பார்ப்பாகும்.

யாழ். மாவட்­டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆச­னங்­களைப் பெற்று பாரிய சாதனை படைத்­தி­ருக்­கின்ற போதும் 6 ஆச­னங்களை பெறு­வ­தற்­கு­ரிய வாய்ப்பை மிக மிக சொற்­ப­ளவு வாக்­கான 6 வாக்­கு­களால் இழந்­துள்­ளது என்­பது கவலை தரு­கின்ற விடயமாகும். நாம் இவ் விடயம் சம்­பந்­த­மாக தேர்­த­லுக்கு முன்பே கூறி­யுள்ளோம். சிறு கட்­சிகள் அதா­வது ஒரு ஆச­னத்தைக் கூட பெற தகு­தி­யற்ற கட்­சிகள் மக்­க­ளு­டைய செல்­வாக்கைப் பெறாத கட்­சிகள் இவ்­வா­றா­ன­தொரு நிலைக்கு மக்­களைத் தள்­ள­லா­மென முன்பே கூறி­யி­ருந்தோம்.

இதன் கார­ண­மாக மக்­க­ளு­டைய உரி­மைக்கு பாதகம் ஏற்­ப­டு­மெனக் கூறினோம். இக்­கட்­சி­களை தேர்­தலில் இருந்து வில­கும்­படி கோரிக்கை விடுத்தோம். அவர்கள் வில­க­வில்லை. அடம்­பி­டித்து போட்டியிட்டார்கள். தற்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பெற்ற சிறியளவு வாக்குகள் காரணமாக கூட்டமைப்பின் பெரிய வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது. யாழ்.மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன.

இந்நிலைக்கு பொறுப்பானவர்கள் அந்தக் கட்சிகள் மக்களுக்கு பதில் கூற வேண்டும். தமது பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்... Reviewed by Author on August 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.