அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாக செயற்படுவோம் : மெத்தியூஸ் நம்பிக்கை


இந்திய அணிக்கிடையிலாக டெஸ்ட் தொடரில்  நாம் நன்றாக செயற்படுவோம் என்ற நம்பிக்கையுள்ளது. இதில் வெற்றி பெறுவதன் மூலம் சங்காவுக்கு நல்ல வழியனுப்புதலை வழங்குவோமென இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்தார்.

இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ள நிலையில், கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மெத்தியூஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இங்கிலாந்தில் விளையாடி வெற்றிபெற்ற அதே அணியே இம்முறை இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது.

கடந்த முறை இரு அணிகளும் கலந்து கொண்டு விளையாடிய டெஸ்ட் தொடரின்போது கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்றார்.

தற்போது மீண்டும் இரு அணிகளும் கலந்துகொள்ளும் டெஸ்ட் தொடரின் போது மற்றுமொரு ஜாம்பவான் குமார் சங்கக்கார ஓய்வுபெறவுள்ளார்.

இப் போட்டி  அனைத்து இலங்கையர்களுக்கும் மிகமுக்கியமானது. இத் தொடரில் நாம் நன்றாக செயற்படுவோம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இதில் வெற்றிபெறுவதன் மூலம் ஓய்வுபெறவுள்ள குமார் சங்கக்காரவுக்கு நாம் நல்ல வழியனுப்புதலை வழங்க முடியும்.

என்னைப்பொறுத்தவரையில் இரு அணிகளும் திறமையான அணிகள். நன்றாக திறைமையை வெளிப்படுத்தும் அணி வெற்றியை ருசிக்கும் என மெத்தியூஸ் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாக செயற்படுவோம் : மெத்தியூஸ் நம்பிக்கை Reviewed by Author on August 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.