அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காணியை கடற்­ப­டை­யினர் அப­க­ரிக்க முயற்சி...


மன்னார் பேசாலை வெற்­றி­மாங்­கு­டி­யி­ருப்பு கிரா­மத்தில் உள்ள 3 ஏக்கர் விஸ்­தீ­ரணம் கொண்ட காணியை கடற்­ப­டை­யினர் அப­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­வ­தாக பேசாலை சென்.-விக்­டரிஸ் ஆலய அருட்­பணி பேர­வை­யினர் கவலை தெரி­வித்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்­பாக பேசாலை சென்-.விக்­டரிஸ் ஆலய அருட்­பணி பேர­வை­யினர் மன்னார் பிர­ஜைகள் குழுவின் கவ­னத்­திற்கு நேற்றுக் கொண்டு வந்­துள்­ள­தோடு முறைப்­பாட்­டையும் பதிவு செய்­துள்­ளனர்.

குறித்த முறைப்­பாட்டில் மேலும் குறிப்­பி­டு­கையில்,
பேசாலை கிரா­மத்தின் மேற்குப் பக்­க­மாக பேசா­லையில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சுமார் 210 ஏக்கர் விஸ்­தீ­ரணம் கொண்ட வெற்­றி­மாங்­கு­டி­யி­ருப்பு என்­ற­ழைக்­கப்­படும் இக்­காணி பேசாலை புனித வெற்றி நாயகி ஆல­யத்­திற்குச் சொந்­த­மா­னது.

இக்­கா­ணிக்­கான உறுதி, நில அள­வைப்­படம், வர­லாற்­றுத்தாள் போன்ற ஆவ­ணங்கள் மன்னார் மறை­மா­வட்ட ஆயரின் பெயரில் எம்­மிடம் உள்­ளது.

சுமார் 10 வரு­டங்­க­ளுக்கு முன் இங்கு வந்த கடற்­ப­டை­யினர் இங்கு படை­முகாம் ஒன்றை அமைக்க முற்­பட்­ட­போது பேசாலை புனித வெற்­றி­நா­யகி ஆலய அருட்­பணிச் சபை­யினர் இதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து படை­முகாம் ஒன்றை குறித்த கோயில் காணியில் அமைப்­பதை தடுத்­தனர்.

இந்த நிலையில் இப்­ப­ணிக்கு பொறுப்­பாக வந்­தி­ருந்த கடற்­படை பொறுப்­ப­தி­காரி எமது கிரா­மத்தின் முன்னாள் பங்­குத்­தந்தை யுடன் இணக்­க­மாக நட்­பு­ற­வுடன் உரை­யாடி தாங்கள் தற்­கா­லி­க­மாக சிறிது காலம் இங்கு இருப்போம் என்றும் பொருத்­த­மான ஒரு இடத்தைக் கண்­டு­பி­டித்­த­வுடன் இங்­கி­ருந்து இடம்மாறி விடுவோம் என்று தெரி­வித் ­தார்.

இந்த நிலையில் எமது பங்­குத்­தந்தை மற்றும் மக்­களின் எதிர்ப்பின் மத்­தி­யிலும் ¾ ஏக்கர் அள­வான காணி­யினை பல­வந்­த­மாக பிடித்து அக்­கா­ணியில் தற்­கா­லி­க­மாக தமது கடற்­படை முகாமை அமைத்­தனர்.

தற்­போது அக்­காணி விசா­ல­மாக்­கப்­பட்­டுள்­ள­தோடு சுமார் 3 ஏக்கர் அள­வுள்ள காணியை கடற்­ப­டை­யி­ன­ருக்கு அளந்­தெ­டுப்­ப­தற்­கான முயற்­சிகள் தற்­போது தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த 2013 ஆம் ஆண்டு யூலை மாத­ம­ளவில் மேற்­கு­றித்த காணியை நில அளவை செய்ய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்ட போது எமது மக்­க­ளி­ட­மி­ருந்து பாரிய எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவற்றை எல்லாம் புறந்­தள்ளி அதை அரச வர்த்­த­மா­னியில் பிர­க­ட­னப்­ப­டுத்தி எந்­த­வித அறி­வித்­தலும், நஷ்­ட­ஈ­டு­களும் இன்றி தமது இஷ்­டத்­துக்கு நில அள­வை­யாளர் ஒரு­வரைக் கொண்டு குறித்த காணியில் சுமார் 3 ஏக்கர் காணியை சுவீ­க­ரிக்க முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

குறித்த காணி அப­க­ரிக்கும் செயற்­பாட்டை பேசாலை வெற்­றி­நா­யகி ஆலய மேய்ப்­புச்­ச­பையும், பேசாலை மக்­களும் வன்­மை­யாகக் கண்­டித்­துள்­ளனர்.
குறித்த காணி அப­க­ரிப்பு முயற்­சியை உட­ன­டி­யாக கைவி­டு­மாறும் கோரிக்­கை­க­ளையும் முன்­வைத்­துள்­ளனர்.

மத பீடங்­க­ளுக்குச் சொந்­த­மான சொத்­துக்­களை அரசு சுவீ­க­ரிப்­பது பொருத்­த­மா­ன­தில்லை. இவ்­வ­ளவு காலமும் பல்­வேறு படைத்­த­ரப்­பி­னரால் கைப்பற்றப்பட்ட காணி களை மீண்டும் அதன் உரிமையாளர்களுக்கு வழங்குவது என்ற தீர்மானத்தில் பல ஏக்கர் காணிகளை மீள உரிமையாளர்களிடம் வழங்கி வருகின்ற இந்த அரசாங்கம் இவ் வேளையில் இக்காணி அபகரிப்பு செய லானது அரசின் தற்போதைய கொள்கைக ளுக்கு முரணானதாக அமைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னாரில் காணியை கடற்­ப­டை­யினர் அப­க­ரிக்க முயற்சி... Reviewed by Author on August 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.