அண்மைய செய்திகள்

recent
-

மலை­யக மக்கள் எந்தக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதில் தெளி­வாக இருக்­கின்­றனர் :திகாம்­பரம்,,,


மலை­யக மக்கள் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்தக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும், யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதில் தெளி­வாக இருக்­கின்­றார்கள். கடந்த காலங்­களைப் போல யாரும் மக்­களை ஏமாற்ற முடி­யாது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் நூறு நாள் வேலைத் திட்­டத்தில் மலை­யக மக்­க­ளுக்­கான தனி­வீட்டுத் திட்டம், ஏழு பேர்ச் காணி, கல்வி அபி­வி­ருத்தி போன்ற சமூக நலத் திட்­டங்கள் அர­சாங்­கத்தின் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நுவ­ரெ­லியா மாவட்ட வேட்­பா­ள­ரு­மான பி. திகாம்­பரம் தெரி­வித்தார்.

நோர்வூட் போட்ரி தோட்­டத்தில் இடம்­பெற்ற தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

திகாம்­பரம் தொடர்ந்து பேசு­கையில்,

மலை­யக மக்கள் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் எந்தக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும், யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதில் தெளி­வாக இருக்­கின்­றார்கள். கடந்த காலங்­களைப் போல யாரும் மக்­களை ஏமாற்ற முடி­யாது. ஐக்­கிய தேசியக் கட்­சியின் நூறு நாள் வேலைத் திட்­டத்தில் மலை­யக மக்­க­ளுக்­கான தனி­வீட்டுத் திட்டம், ஏழு பேர்ச் காணி, கல்வி அபி­வி­ருத்தி போன்ற சமூக நலத் திட்­டங்கள் அர­சாங்­கத்தின் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எனவே, தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் அதில் போட்­டி­யிடும் தமிழ் வேட்­பா­ளர்­க­ளுக்கும் வாக்­க­ளித்து வெற்றி பெறச் செய்­வ­தற்குத் தயா­ராக இருக்­கின்­றார்கள்.

இந்­நி­லையில் தேர்தல் முடிந்த பிறகு பேசு­வ­தற்­காக ஒத்தி வைக்­கப்­பட்­டுள்ள சம்­பள உயர்வு தொடர்­பான பேச்­சு­வார்த்­தையை நடத்­து­வ­தற்கு கம்­ப­னிகள் அழைப்பு விடுத்­த­தா­கவும், அதற்கு தற்­போது நேர­மில்லை என்று கூறி விட்­ட­தா­கவும் வேட்­பாளர் ஒருவர் ஊட­கங்­க­ளுக்குத் தெரி­வித்­துள்ளார். இதை நம்ப முடி­யுமா?

தேர்தல் காலத்தில் இவ்­வாறு எதையும் செய்ய முடி­யாது என்­ப­தற்­கா­கவே கூட்டு ஒப்­பந்தப் பேச்­சு­வார்த்தை பிற்­போ­டப்­பட்­டுள்­ளது. அவ்­வாறு பேச்­சு­வார்த்­தைக்கு அழைப்பு விடுக்­கப்­பட்டால் குறிப்­பிட்ட ஒரு தொழிற்­சங்­கத்தை மாத்­திரம் அழைப்­பார்­களா? கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் ஏனைய தொழிற்­சங்­கங்­க­ளுக்கு ஏன் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை? கூட்டு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திடும் மூன்று தொழிற்­சங்க அமைப்­பு­க­ளோடு பேச்­சு­வார்த்தை நடத்தி இணக்கம் காணப்­ப­டாமல் ஒத்­தி­வைக்­கப்­பட்ட பேச்­சு­வார்த்­தையை ஒரு தொழிற்­சங்­கத்­துடன் மாத்­திரம் பேசு­வ­தற்கு கம்­ப­னி­களோ அல்­லது முத­லா­ளிமார் சம்­மே­ள­னமோ முன்­வ­ருமா?

ஆயிரம் ரூபா சம்­பள உயர்வைப் பெற்றுக் கொடுப்­ப­தாக அன்றும் இன்றும் கூறி வரு­கின்ற கூற்­றுக்கு தமிழ் முற்­போக்கு கூட்­டணி என்றும் தடை­யாக நிற்­காது என்­பதை உறு­தி­யாக தெரி­வித்துக் கொள்­கின்றோம். ஆனால், சம்­பள உயர்வு தொடர்­பான பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு கம்­ப­னிகள் அழைப்பு விடுத்­துள்­ள­தாகக் கூறு­வது தேர்தல் நேரத்தில் வெற்­றிலை சின்­னத்­துக்கு தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஏமாற்று வித்தையாகும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வரும்போது மேலும் அவர்களை ஏமாற்ற பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப் படுவதை நம்பி மேலும் மோசம் போய்விடக் கூடாது என்றார்.

மலை­யக மக்கள் எந்தக் கட்­சிக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பதில் தெளி­வாக இருக்­கின்­றனர் :திகாம்­பரம்,,, Reviewed by Author on August 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.