கொலைகாரர்கள், திருடர்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருவதற்கு இடமளிக்க வேண்டாம் :சம்பிக,,,
கொலைகாரர்கள், திருடர்களுக்கு மீண்டும் பாராளுமன்றத்திற்கு வருவதற்கு இடமளிக்க வேண்டாம். தேர்தலில் அவர்களை நிராகரியுங்கள் என தெரிவித்த அமைச்சர் சம்பிக ரணவக, நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகளும், பிரிவினைவாதமும் தலைதூக்க இடமளிக்கமாட்டோம். அதே வேளை வெளிநாடுகளுக்கு அடிபணியவும் மாட்டோம் என்றும் அமைச்சர் சூளுரைத்தார்.
பத்தரமுல்லையிலுள்ள “அப்பேகம” கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற “நல்லட்சிக்கான சங்க சம்மேளன மாநாட்டில்” உரையாற்றும் போதே மின்சக்தி மின்வலுத்தறை அமைச்சர் சம்பிக ரணவக்க இவ்வாறு தெரிவித்தார்.
நாம் எதற்கும் அஞ்சத்தேவையில்லை. விடுதலைப் புலிகளை மீண்டும் தலைதூக்குவதற்கோ பிரிவினைவாதத்திற்கோ நாம் இடமளிக்க மாட்டோம்.
அதேபோன்று வெளிநாடுகளுக்கு அடிமைப்பட மாட்டோம். பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தெற்காசியாவிலும் ஆசியாவிலும் உயர்ந்த நாடாக இலங்கையை மாற்றுவோம்.
கொலைகாரர்கள், திருடர்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருவதற்கு இடமளிக்க வேண்டாம் :சம்பிக,,,
Reviewed by Author
on
August 06, 2015
Rating:

No comments:
Post a Comment