அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஜெயவர்த்தனபுர அணி சம்பியன்...


அகில இலங்கை பல்க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு இடையே நடைபெற்ற வலைப்­பந்­தாட்டப் போட்­டியில் கொழும்பு ஜெய­வர்த்த­ன­புர பல்­க­லைக்­க­ழக அணி அகில இலங்கை சம்­பி­ய­னானது.

யாழ்ப்­பாணம் பல்­க­லைக்க­ழக விளை­யாட்டு மைதா­னத்தில் ஞாயிற்றுக் கிழமைபிற்­பகல் நடை பெற்ற இறுதிப் போட்­டியில் கண்டி பேராதனைப் பல்­கலைக் கழக அணியும் கொழும்பு ஜெய­வர்த்­த­ன­புர பல்­கலைக் கழக அணியும் மோதிக் கொண்­டன.

நான்கு கால் பாதி ஆட்­டங்­களை கொண்ட இந்தப் போட்­டியில் முதற் கால் பாதி ஆட்­டத்தில் ஜெய­வர்த்­த­ன­புர அணி 12–06 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்றி பெற்று மைதா­னத்தில் தனது ஆதிக்­கத்தை நிலை நாட்டத் தொடங்­கி­யது.

இரண்டாம் கால் பாதி ஆட்­டத்­திலும் மேலும் 12–புள்­ளிகள் என்ற நிலையில் முன்­னிலை பெற்­றது. ஆட்ட நிறைவில் ஜெய­வர்த்­த­ன­புர பல்கலைக் கழக அணி 42–30 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் பேரா­தனைப் பல்­கலைக்க­ழக அணியை வெற்றி கொண்டு பல்கலைக்கழ­கங்­க­ளுக்கு இடை­யே­யான போட்­டியில் அகில இலங்கை ரீதியில் 2015ஆம் ஆண்­டுக்­கான சம்­பி­ய­னாக தெரிவு செய்­யப்­பட்­டது.
பல்கலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஜெயவர்த்தனபுர அணி சம்பியன்... Reviewed by Author on September 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.