அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா.அறிக்­கை­யூ­டாக போர்க்­குற்ற விசா­ர­ணையும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் பெற­மு­டியும்...


ஐ.நா. மனித உரி­மைகள் அலு­வ­லகம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் விசேட கலப்பு நீதி­மன்றம் ஊடாக போர்க்­குற்­றங்கள், மனித உரி­மைகள் மீறல்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­படும் அதே­ச­மயம் இலங்கை இனப் பிரச்­சி­னைக்­கான தீர்­வு­காண வழி­மு­றை­களும் அதில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்­துள்ளார்.

நேற்­றைய தினம் கோப்பாய் கோமகன் அமரர் கு.வன்­னி­ய­சிங்­கத்தின் 56 ஆவது நினைவு தினம் நீர்­வேலி வாழைக்­குலை சங்க மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இதன் ­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

பல்­வே­று­பட்ட தியா­கங்­க­ளி­னாலும் போராட்­டங்­க­ளி­னாலும் உயி­ரி­ழப்­புக்­க­ளி­னாலும் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்ட எமது போராட்டம் கோப்பாய் கோமகன் அமரர் கு.வன்­னி­ய­சிங்கம் போன்ற தியா­கி­களால் 60 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஆரம்­பிக்­கப்­பட்­டது.

கோப்பாய் கோமகன் ஆரம்­பித்து வைத்த தமிழ் தேசியம் தொடர்­பான உணர்வு இந்த நிலைக்கு வந்­துள்­ளது. அவர் வடக்­கையும் கிழக்­கையும் சம­மாக நோக்­கினார். இரண்டு மாகா­ணங்­க­ளையும் உள்­ள­டக்­கிய தமிழர் தாய­கத்தை நேசித்தார். அவ­ரு­டைய நிலை­யி­லி­ருந்து நாங்­களும் மாற­மாட்டோம் என்றார்.

மேலும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ளரின் விசா­ர­ணைக்கு நிய­மிக்­கப்­பட்ட குழு­வினை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசு இலங்­கைக்கு உள்ளே பிர­வே­சிக்க அனு­ம­திக்­க­வில்லை. ஆனால் ஆணைக்­குழு உரிய முறையில் சாட்­சி­யங்­களை இலங்­கைக்கு வெளியே இருந்து பதிவு செய்­த­தோடு நவீன தகவல் தொழில்­நுட்ப சாத­னங்­களின் உத­வி­யுடன் உண்மை நிலையைக் கண்டு கொண்டு அறிக்­கையைத் தயா­ரித்­தது.

தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை மார்ச் மாத மனித உரிமை அமர்­வின்­போது வெளி­யிடத் தயா­ராக இருந்­த­போதும் இலங்­கையில் ஏற்­பட்ட அர­சியல் மாற்­றத்­தையும் புதிய அரசின் கோரிக்­கை­யையும் கருத்­திற்­கொண்டு 6 மாதங்கள் பின்­தள்­ளப்­பட்டு தற்­போ­தைய அமர்வில் அறிக்­கையை வெளி­யிட்­டுள்­ளது.

குறிப்­பாக ஐ.நா.வால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்ட சிபாரிசுகள் கருத்­துக்கள் மார்ச் மாதம் உறுதி செய்­யப்­பட்­ட­வை­யாகும்.இந்­நி­லையில் இந்த அறிக்கை வெளி­வ­ர­முதல் தமி­ழ­ரசுக் கட்­சி­யையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பையும் தொடர்­பு­ப­டுத்தி விஷ­மப்­பி­ர­சாரம் செய்­யப்­பட்­டன. அதில் தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­மை­யையும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­மை­யையும் மாற்­ற­வேண்டும். இரண்டு கட்­சி­களும் தமது சுய விருப்­பத்­திற்கு ஏற்ப செயற்­ப­டு­கின்­றன என சிலரால் பிர­சாரம் மேற்­கொள்­ளப்­பட்­டன.
பொதுத் தேர்­த­லின்­போது சுயேச்சைக் குழுக்களும் சுயநலக் குழுக்களும் தமிழ் மக்களிடையே விஷமப் பிரசாரம் செய்த மையினால் எமது பிரதிநிதித்துவத்தின் எண்
ணிக்கை குறைவடைந்தது.

அவ்வாறு இல்லாவிட்டால் யாழ்.,வன்னித் தேர்தல் மாவட்டத்தில் 7 பிரதிநிதித்துவங்களையும் பெற்றுக்கொண்டிருப்போம் என்றார்.



ஐ.நா.அறிக்­கை­யூ­டாக போர்க்­குற்ற விசா­ர­ணையும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வையும் பெற­மு­டியும்... Reviewed by Author on September 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.