அண்மைய செய்திகள்

recent
-

சைவ சமயப் பரீட்சை...


வண்ணை சாந்­தையர் மடம் ஸ்ரீகற்­பக விநா­யகர் ஆலய சைவ சமய அபி­வி­ருத்திக் கழ­கத்தின் சைவ சமய அறிவுப் பரீட்­சையும் செயல்­முறைப் பரீட்­சையும் எதிர்­வரும் அக்­டோபர் மாதத்தில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

பாட­சாலை மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும் இப்­போட்­டியில் தரம் 1-2 மாண­வர்­க­ளுக்கு நீதிநூல் மனனப் போட்­டியும் தரம் 3-11 வரை­யான மாண­வர்­க­ளுக்கு சைவ சமய அறிவுப் பரீட்சை, கோலம் போடுதல், மாலை கட்­டுதல், தோரணம் பின்­னுதல் ஆகிய செயன்­முறைப் போட்­டி­களும் ஒழுங்கு செய்­யப்­பட்­டுள்­ளன.

போட்­டியில் பங்கு பெற விரும்பும் மாண­வர்கள் சைவ சமய அபி­வி­ருத்திக் கழக அறி­வகம், இல 82 நாவலர் வீதி, வண்­ணார்­பண்ணை, யாழ்ப்­பாணம் என்ற முக­வ­ரியில் தொடர்பு கொண்டு விப­ரங்­களைப் பெற்றுக் கொள்­ள­மு­டியும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த போட்டிப் பரீட்­சைகள் அக்­டோபர் 18ஆம் திக­தியும் நீதி நூல் மனனப் போட்டி அக்­டோபர் 25 ஆம் திக­தியும் செயன்­முறைப் பரீட்சைகள் நவம்பர் 1ஆம் திக­தியும் நடை­பெ­ற­வுள்­ளன. இவற்­றிற்­கான விண்­ணப்ப முடிவுத் திகதி இம்­மாதம் 25ஆம் திகதி என சைவ சமய அபிவிருத்திக் கழக பரீட்சைச் செயலர் சு.சிறிகாந்தன் தெரிவித்துள்ளார்.



சைவ சமயப் பரீட்சை... Reviewed by Author on September 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.