அண்மைய செய்திகள்

recent
-

ஆணைக்குழுவை கலைப்பதற்கான தீர்மானம் இல்லை...


இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை கலைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழு இவ்வாரம் கலைக்கப்பட உள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலஞ்ச ஊழல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவை அமைத்தல் அதற்கான அங்கத்தவர்களை நியமித்தல் மற்றும் நீக்குதல் என்பன 19 ஆவது அரசியல் யாப்பின்படி நடைபெறவேண்டும்.

அதன்படி, இலஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவை கலைப்பதற்கு அதிகாரம் இல்லை. எவ்வாறானபோதும் அரசியல் யாப்பு சபை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து சகல ஆணைக்குழுக்களுக்கும் ஆணையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவை கலைப்பதற்கான தீர்மானம் இல்லை... Reviewed by Author on September 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.