அண்மைய செய்திகள்

recent
-

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு.-Photos


தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(20) மாலை மன்னார் வங்காலையில் நானாட்டான் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அன்புராஜ் லெம்பேட் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இதன் போது உதவி அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டிமேல், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சூசைதாசன்,இலங்கை தமிழரசுக்கச்சியின் இலைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் , உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

வங்காலை புனித ஆனாள் ம.வி பாடசாலை மைதானத்தில் இடம் பெற்ற குறித்த வரவேற்பு நிகழ்வின் போது பாராளுமன்ற தேர்தல் காலங்களில் வங்காலை கிராமத்தில் காணப்பட்ட பிரிவினை வாதங்கள் ஒழிக்கப்பட்டு வங்காலை கிராம மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவும்,தேர்தல் காலங்களில் ஏற்பட்ட பகைமை மறைக்கப்பட்டு மக்கள் வேற்றுமை இன்றி வாழ வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் வழியுறுத்தப்பட்டது.

இதன் போது வங்காலை பங்குத்தந்தை மற்றும் நூற்றுக்கணக்கான வங்காலை மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதே வேளை மன்னார் பனங்கட்டு கொட்டு கல்வி கலாச்சார மேம்பாட்டு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர்கள் கௌரவிப்பும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிப்பும் நேற்று(20) மிக சிறப்பாக இடம் பெற்றது.

இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டதோடு சிறந்த மாணவர்களுக்கு பரிசில்களும்,நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னாரில் அமோக வரவேற்பு.-Photos Reviewed by NEWMANNAR on September 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.