அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இடம் பெற்ற தேசிய கடற்கரையினை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம்.-Photos


தேசிய கடற்கரையினை தூய்மைப்படுத்தும் செயற்திட்டத்தினை இன்று திங்கட்கிழமை(21) மன்னாரில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய கடற்கரையினை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் பிரகடனம் கடந்த 21 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டது.

அதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மாவட்ட அனார்த்த முகாமைத்துவ பிரிவு,கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவை இணைந்து குறித்த செயற்திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுத்துள்ளனர்.

மன்னார் தாழ்வுபாட்டு கடற்கரையில் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்வை.எஸ்.தேசப்பிரிய அவர்களினால் குறித்த செயற்திட்டம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார்,மாவட்ட அனார்த்த முகாமைத்துவப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து மன்னார்,மாந்தை மேற்கு,நானாட்டான்,முசலி ஆகிய நான்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கடற்கரையோரப்பகுதிகளில் குறித்த தூய்மைப்படுத்தும் வேளைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வேளைத்திட்டத்தில் பொலிஸ்,கடற்படை,மாணவர்கள்,மீனவர்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் 116 கிலே மீற்றர் தூரம் கொண்ட கடற்கரையோரப்பகுதி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக ;,மாவட்ட அனார்த்த முகாமைத்துவப்பிரிவின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.றியாஸ் தெரிவித்தார்.






மன்னாரில் இடம் பெற்ற தேசிய கடற்கரையினை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம்.-Photos Reviewed by NEWMANNAR on September 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.