செயா சதெவ்மியின் கொலை விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு
கொட்டதெனிய, செயா சதெவ்மியை கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மாஅதிபரின் உத்தரவுக்கு அமைய விசாரணையை ஒப்படைத்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இந்த குற்றச்செயல் தொடர்பில் 15 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான தகவல்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சந்தேகநபரை இனங்காண்பதற்கு டி.என்.ஏ சோதனையை முன்னெடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
சிறுமியின் உடலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு முடிகளையும் பரிசோதனைக்கு அனுப்பவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
கடந்த 12 ஆம் திகதி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செயா சதெவ்மியின் இறுதிக்கிரியைகள் நேற்று மாலை நடைபெற்றன.
செயா சதெவ்மியின் கொலை விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 17, 2015
Rating:

No comments:
Post a Comment