120 இந்திய, 36 இலங்கை மீனவர்கள் இரண்டு நாட்களுக்குள் விடுதலை! - வெளிவிவகார அமைச்சு தகவல்
இலங்கையில் சிறைவைக்கப்பட்டுள்ள 120 இந்திய மீனவர்களும், இந்தியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள 36 இலங்கை மீனவர்களும் இரண்டு நாட்களுக்குள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷனி கொலன்ன தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சின் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சின் பேச்சாளர் இந்தத் தகவலையும் வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ரோலர் படகு பாவனையின் சிக்கல் நிலை குறித்து இதற்கு முன்னரும் நாம் தெளிவுப்படுத்தியிருந்தோம்.
மீனவர்களின் பிரச்சினையை வாழ்வாதார ரீதியிலும், மனிதாபிமான ரீதியிலும் அணுகவேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய மீனவர்கள் 120 பேர் இங்கு சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் எமது நாட்டு மீனவர்கள் 36 பேர் அங்கு சிறைகளிலுள்ளனர். இவர்கள் அனைரும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள்.
இவர்களின் விடுதலை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இல்லை. புரிந்துணர்வின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றார்.
வெளிவிவகார அமைச்சின் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சின் பேச்சாளர் இந்தத் தகவலையும் வெளியிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிப்பதால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ரோலர் படகு பாவனையின் சிக்கல் நிலை குறித்து இதற்கு முன்னரும் நாம் தெளிவுப்படுத்தியிருந்தோம்.
மீனவர்களின் பிரச்சினையை வாழ்வாதார ரீதியிலும், மனிதாபிமான ரீதியிலும் அணுகவேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் இரு நாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய மீனவர்கள் 120 பேர் இங்கு சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் எமது நாட்டு மீனவர்கள் 36 பேர் அங்கு சிறைகளிலுள்ளனர். இவர்கள் அனைரும் இன்னும் இரண்டு நாட்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள்.
இவர்களின் விடுதலை தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இல்லை. புரிந்துணர்வின் அடிப்படையிலேயே நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என்றார்.
120 இந்திய, 36 இலங்கை மீனவர்கள் இரண்டு நாட்களுக்குள் விடுதலை! - வெளிவிவகார அமைச்சு தகவல்
Reviewed by NEWMANNAR
on
October 29, 2015
Rating:

No comments:
Post a Comment