அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் அரைக்கும் ஆலை திறப்பு! வடமாகாண முதல்வர் பங்கேற்பு-Photos


மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிழக்கில் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு அமைக்கப்பட்ட அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் ஆகியவை இன்று(3) சனிக்கிழமை மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண சபையின் வருடாந்த அபிவிருத்தி நன்கொடையின் கீழ், கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் அபிவிருத்தி பணி முன்னெடுக்கப்பட்டது.

சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட குறித்த அரைக்கும் ஆலை மற்றும் விற்பனை நிலையம் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆலையினை திறந்து வைத்தார்.

இதன் போது வடமாகாண கல்வி அமைச்சர் ரி.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, பிரதேச செயலாளர்கள் மாதர், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









மன்னாரில் அரைக்கும் ஆலை திறப்பு! வடமாகாண முதல்வர் பங்கேற்பு-Photos Reviewed by NEWMANNAR on October 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.