அண்மைய செய்திகள்

recent
-

சிறுவர்களை பாதுகாக்க விஷேட சாதனம்...


அண்மைய காலங்களில் சிறுவர்கள் முகங்கொடுத்த துயரமான சம்பவங்களை தொடர்ந்து, சிறுவர்களை பாதுகாக்க விஷேட தொலைபேசி சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

டெலிகொம், மொபிடல், டயலொக், ஐசிடி போன்ற வளர்ச்சியடையும் தொழில்நுட்பத்துடன் இணைந்து இந்த சாதனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் 3 இலக்கங்களைக் கொண்ட சிறுவர்கள் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ளும் வகையில் புதிய கருவி அறிமுகப்படுத்தப்படும் எனவும் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடியதாகவும் இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இதன்மூலம் சிறுவர்கள் அவசர சந்தர்ப்பங்களில் பெற்றோர்கள் மற்றும் பொலிஸாரை தொடர்புகொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

சிறுவர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர்களை பாதுகாக்க விஷேட சாதனம்... Reviewed by Author on October 02, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.