அண்மைய செய்திகள்

recent
-

பூண்டிமாதா முன் பள்ளி, எமில் நகர் மன்னார் ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மன்னார் பூண்டிமாதா முன் பள்ளி ஆசிரியர்களினை கௌரவிக்கும் நிகழ்வு -Photos


06.10.2015  செவ்வாய் கிழமை காலை  8.30  மணிக;கு  முன் பள்ளியில் இடம் பெற்றது.  இந் நிகழ்விற்கு பெற்றோர் சிறுவர்களுடன்  இணைந்து புனித செபஸ்தியார்  பேராலய  உதவி பங்குத் தந்தை முகாமைத்துவ குழு  உறுப்பினர்களும் கிராம அலுவலர்  அபிவிருத்தி  அலுவலர்   முன் பள்ளி  பிள்ளைப் பருவ  அபிவிருத் தி  உத்தியோகத்தர்  சமுர்த்தி  அலுவலர் ஆகியோரும்  கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர்.  

இந் நிகழ்வு  எல்லோராலும்   வியக்கும்  வண்ணம்  இருந்ததுடன்  எமது  சிறார்கள்   மிகவும்   சந்தோசத்துடன்   காணப்பட்டனர்.

இந் நிகழ்வில்  ஆசிரியர்களுடன்   அவர்களின்  குடும்பத்தவரும் கௌரவிக்கப்பட்டதுடன்  ஆசிரியர்களுக்கு நினைவு பரிசில்கள் வழங்கி   பெற்றோர்களது  ஏற்பாட்டில்   ஆசிரியர்களினால்   கேக்   வெட்டி  ஆசிரியர்களால்   சிறுவர்களுக்கும்  சிறுவர்களால்  ஆசிரியர்களுக்கும்  ஊட்டப்பட்டு மிகவும்  சிறப்பாகவும் , மகிழ்வாகவும்  நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இம் முன் பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும்  இந் நிகழ்வினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.

முன் பள்ளி முகாமைத்துவ குழு,
பூண்டி மாதா முன் பள்ளி,
எமில் நகர்  மன்னார். 




















பூண்டிமாதா முன் பள்ளி, எமில் நகர் மன்னார் ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு மன்னார் பூண்டிமாதா முன் பள்ளி ஆசிரியர்களினை கௌரவிக்கும் நிகழ்வு -Photos Reviewed by NEWMANNAR on October 06, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.