அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தன் மகசின் அரசியல் கைதிகளுடன் சந்திப்பு: உண்ணாவிரதம் தற்காலிமாக இடைநிறுத்தம் : கைதிகளால் கடிதமும் வழங்கி வைப்பு....


எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த கொழும்பு மகசின் சிறைசாலையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளை சற்றுமுன்னர் சந்தித்த பின்னர் அரசியல் கைதிகள் தமது உண்ணாவிரதத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.

நீண்­ட­கா­ல­மாக விசா­ர­ணை­க­ளின்றி நாடா­ள­விய ரீதியில் உள்ள 14 சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதிகள் 217பேர் நல்­லாட்சி அர­சாங்கம் தமக்கு பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை அளிக்க வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி கடந்த திங்­கட்­கி­ழமை காலை முதல் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தனர். இந்­நி­லையில் இன்று ஆறாவது  நாளா­கவும் தமது உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை தொடர்ந்­தி­ருந்­தனர்.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தி­த­லை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உண்­ணா­வி­ர­த­மி­ருந்த தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துள்ளனர்.

இதன்போது தமிழ் அர­சியல் கைதிகள் தொடர்­பான விவகாரத்திற்கு எதிர்­வரும் நவம்பர் மாதம் 7ஆம் திக­திக்கு முன்­ன­தாக நிரந்­தர தீர்வு வழங்­கப்­ப­டு­மென ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தமக்கு அறிவித்துள்ளதாகவும் எனவே தமது உண்ணாவிரதத்தை கைவிடுமாறு சம்பந்தன்  கோரியதாகவும்; இதனையடுத்தே தாம் உண்ணாவிரதத்தை கைவிட்டதாகவும் கைதிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தமது வழங்கிய வாக்குறுதி படி விடுதலை வழங்காவிட்டால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்போம் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை தமிழ் அரசியல் கைதிகள் வழங்கியுள்ளனர்.

சம்பந்தன் மகசின் அரசியல் கைதிகளுடன் சந்திப்பு: உண்ணாவிரதம் தற்காலிமாக இடைநிறுத்தம் : கைதிகளால் கடிதமும் வழங்கி வைப்பு.... Reviewed by Author on October 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.