இந்திய மீனவர்கள் 41 பேர் விடுதலை....
.
மன்னார் கடல்பிராந்தியத்தில் இலங்கையில் தடைசெய்யபட்ட மீன்பிடி வலைகளை கொண்டும் இலங்கை கடல் பிராந்தியத்திற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து அண்மைக்காலத்தில் 8 இந்திய இழுவைப்படகுகளுடன் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யபட்டு மன்னார் கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யபட்டு விளக்கமறியலில் வைக்கபட்டிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த 4 சிறுவர்கள் உட்பட 41 இந்திய மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மன்னார் கடற்தொழில் அதிகாரி நீதிமன்றில் விண்ணப்பம் சமர்ப்பித்ததையடுத்து மன்னார் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ குறித்த இந்திய மீனவர்களை மன்றுக்கு ஆஐர்படுத்தி விடுதலை செய்ய இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டார்
இந்திய இலங்கை அரசாங்கத்தின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இலங்கையில் கைதுசெய்யபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு சட்டமாஅதிபர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து மன்னார் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பில் அன்னை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சிறுவர்களையும் அனுராதபுரம், வவுனியா ஆகிய சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த 4 சிறுவர்கள் உட்பட 41 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி மன்னார் கடற்தொழில் அதிகாரி மன்றில் விண்ணப்பம் சமர்பித்ததைத்தொடர்ந்து இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ இந்திய மீனவர்களை மன்றுக்கு ஆஐர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இவர்கள் விடுதலை செய்யபட்டபோதும் இவர்களுடைய படகுகள் மீன்பிடி ஆதனங்கள் வழங்கப்படவில்லை. மன்னாரில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் பேசாலையில் தங்கவைக்கப்பட்டு தலைமன்னாரூடாக கடல் மார்க்கமாக அழைத்தச் செல்ல இருப்பதாக யாழ் இந்திய தூதரகம் தெரிவித்தது.
இதேவைளை, விடுவிக்கபட்ட இந்திய மீனவர்களின் பெயர் விபரம் -----
- அடைக்கலம் கார்லீன் (22),
- வின்சன் அருளானந்தம் (32),
- சூசை சந்தியா (22),
- சேசு பிறின்டன் (23),
- கெவின்ராஜ் றொன்சலிஸ் (32),
- ஞானசீலன் பாலன் (30),
- இஞ்ஞாசி சிறிதர் (38) ,
- செயந்தி மகிமைராஜ் (55),
- இஞ்ஞாசி அமல்ராஜ் (65),
- இராயப்பன் கிறிஸ்ரோன் (53),
- அந்தோனி ராயப்பன் (48),
- அந்தோனிராஜ் சியோலிசன் (29),
- பத்திநாதன் கிறிஸ்துராஜ் (28),
- சவிரிராஜ் ஜோஸ் (26),
- அந்தனி இராயப்பு ரொனிஸ்ரன் (17),
- கமிலஸ் பிறிட்ஜோய் (17) ,
- குழந்தைசாமி அருளானந்தம் (46),
- கருப்பனன் நீதிதேவன் (33),
- தேவசகாயம் நாதன் (28),
- முத்துக்கறுப்பன் முனியசாமி (60),
- சந்தியா பிரான்சீஸ் சலேசியன் (30),
- ரெம்போ சாத்திரக் (22),
- அருள் பவுல் (23),
- சகாயராஜ் மரியரெமித் (14),
- சந்தியாகு ஜஸ்ரின்திரவியம் (42),
- பாலுசாமி ராஜா (37),
- கங்கையா நாடார் ராமசந்திரன் (44),
- முங்கன் ராசு (45),
- முத்துமுனியன் முனியசாமி ((40),
- காளிரெத்தினம் கார்த்திக் (29),
- பில்லி மச்சக்காளை(58),
- முனியாண்டி ராஜேந்திரன் (52),
- வெள்ளச்சாமி நம்புராஜன(55),
- கறுப்பையா கார்மேகம் (47),
- சின்னப்பு அந்தோனி (48),
- மங்களம் ஆரோக்கியராஜ் (43),
- மோட்ச்சம்ராஜ்(28),
- அந்தோனி சாமி அப்போஸ்தலர்(30),
- அருளானந்தம் தொபியாஸ்(50),
- அடுக்காஞ்சி பேரின்பம்(30),
- அரோக்கியராஜ் ஜீவன்(15)
இந்திய மீனவர்கள் 41 பேர் விடுதலை....
Reviewed by Author
on
November 09, 2015
Rating:

No comments:
Post a Comment