தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்
தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த இருவரே மெகசீன் சிறைச்சாலையிலிருந்து இன்றைய தினம் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டுள்ள குறித்த கைதிகளை அவர்களின் உறவினர்கள் சென்று பார்வையிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சிறை அதிகாரியின் விருப்பின் பேரில் கைதிகள் மீண்டும் மெகசீன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் சிறைச்சாலைகள் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் இருவர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றம்
Reviewed by NEWMANNAR
on
November 29, 2015
Rating:

No comments:
Post a Comment