அண்மைய செய்திகள்

recent
-

ரொறன்ரோ கல்விச் சபையில் தமிழ் மரபுத் திங்கள் பிரகடனம்...


அதிகூடிய பல்லின மாணவரைக் கொண்ட கல்விச் சபைகளில் ஒன்றுமான ரொறன்ரோ கல்விச் சபையானது ஜனவரித் திங்களை தமிழ் மரபுத் திங்களாக பிரகடனம் செய்துள்ளது.
இப்பிரகடனமானது ரொறன்ரோ கல்விச் சபையில் உள்ள பாடசாலைகளில் தமிழர் மரபு, பண்பாடு, மொழி, வரலாற்றைத் தமிழ் மாணவரோடு மட்டுமல்லாது வேற்றின மாணவருடனும் கொண்டாடும் வாய்ப்பை நல்கி உள்ளது.

ரொறன்ரோ கல்விச் சபையானது ரொறன்ரோவின் பல்வேறு பாகங்களிலும் உள்ள 595 பாடசாலைகளில் கல்வி கற்கும் 246,000 மாணவர்களுக்கு தனது சேவைகளை வழங்குகிறது.

இதில் 12,272 மாணவர்கள், அதாவது மொத்த மாணவர் தொகையில் ஏறத்தாழ 5.5% தமிழ் மாணவர்கள்.


தமிழ் மொழியானது ரொறன்ரோ கல்விச் சபையில் இரண்டாவது பெரும் மொழி குழுவாகவும், இரண்டாவது அதிகம் கற்பிக்கப்படும் மொழியாகவும் உள்ளது.
கனடியத்தமிழர் பேரவை, இந்தப் பிரகடனத்திற்கு வழிகோலிய அறங்காவலர் பார்த்தி கந்தவேள் அவர்களை வாழ்த்துவதோடு, இப்பிரகடனத்தை ஒருமுகமாக நிறைவேற்றிய அனைத்து அறங்காவலருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ரொறன்ரோ கல்விச் சபையில் தமிழ் மரபுத் திங்கள் பிரகடனம்... Reviewed by Author on November 09, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.