அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் கிராமங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றக் கூடாது! வடமாகாண ஆளுனர்,,,


வடக்கில் கிராமங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றக் கூடாது என வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார உத்தரவிட்டுள்ளார்.

வட மாகாணசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊர்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் ஆளுனரின் அனுமதியின்றி மாற்றக் கூடாது என அறிவித்துள்ளார்.

வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாண நகர ஆணையாளர் ஆகியோருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

அண்மையில் நாகதீபத்தின் பெயரை நைனாதீவு என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து ஆளுனர் பெயர் மாற்றம் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஊர்கள் இடங்களின் பெயர்கள் மாற்றக் கூடாது என உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளரும் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் கிராமங்கள் மற்றும் இடங்களின் பெயர்களை மாற்றக் கூடாது! வடமாகாண ஆளுனர்,,, Reviewed by Author on November 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.