அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் விசேட போக்குவரத்து திட்டம்....


யாழ். குடாநாட்டைச் சூழவுள்ள ஊர்காவல்துறை, நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, அனலைத்தீவு, மண்டைத்தீவு மக்கள் வாழும் தீவுப் பிரதேசங்களில் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த தீவுகளில் சுமார் 15000 குடும்பங்கள் வசிக்கின்றன. அக்குடும்பங்களில் சுமார் 75 சதவீதமானர்கள் கடற்றொழில், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் பனை சார்ந்த உற்பத்திகள் போன்றவற்றை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர்.

அப்பிரதேசத்தில் காணப்படும் வினை திறனற்ற போக்குவரத்து முறைமை காரணமாக பிரதான நிலத்துக்கான போக்குவரத்திற்கு அதிக நேரத்தையும் பணத்தையும் மக்கள் செலவிட வேண்டிய நிலை உள்ளது.

அதனடிப்படையில் வினைத்திறனான போக்குவரத்து வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்களின் வாழ்க்கை தரத்தை அதிகரிப்பதற்கும் பொருத்தமான 10 திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் விசேட போக்குவரத்து திட்டம்.... Reviewed by Author on November 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.