அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்.-Photos


மன்னாரில் இன்று சிறையில் வாடும் உறவுகளுக்காக பேரணியும் கவனயீர்ப்பு ஊர்வலமும் மிகவும் உணவுர்வு பூர்வமாக நடைபெற்றது.
மன்னார் பிரiஐகள் குழுவினரின் ஏற்பாட்டில் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இருந்து இன்று 10-11-2015 காலை  10 மணிக்கு ஆரம்பமாகிய பேரணி சிறையில் வாடுகின்ற எமது உறவுகளை கைதிகள் என்று இவ்வளவு 23 வருட காலமும் வதைத்தது போதும் எந்த வித நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி பதாதைகளை ஏந்தியவாறு கணவனுக்காகவும்  தனது மகனுக்காகவும் ஒவ்வொருவரும் தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி உணர்வு பூர்வமாக உரிமைக்குரல் எழுப்பியவாறு பேரணியாக மன்னார் மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு…

இந்நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள் பாதிக்கப்பட் மக்கள் பங்குத்தந்தையர்கள் விஷேட விதமாக வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும்.
கௌரவ பாரளுமன்ற குழுக்களின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும்  கௌரவ மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் அவர்களுடன்  மாகண சபை உறுப்பினர் மருத்துவர் குணசீலன் அவர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பணிப்பாளர் அருட்பணி ஜெயபாலன் அவர்களோடு ஏனைய அதிகாரிகள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் பொதுநிலையினர் என அனைவரும் கலந்து கொண்டு ....

உறவுகளுக்காக உணர்வினை வெளிப்படுத்தியதோடு மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களிடம் எந்த வித நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு கண்ணீரோடும் வலிசுமந்து வாழம் இதயத்தோடும் கேட்டுக்கொண்டனர்…

சிறைக்கைதிகளுக்காக குரல் கொடுக்கும் பிரபல சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் அவர்கள் தனது உரையில் யுத்தம் முடிந்த பின்பும் இன்னும் விடுதலை செய்யப்படாடல் இருக்கும் கைதிகளின் நிலை மிகவும் மோசமாகவும்  பரிதாபமாகத்தான் உள்ளது அதே நேரத்தில் 33கைதிகளை விடுதலை செய்வதாக எநத வித வாக்கும் தான்
கொடுக்கவில்லையென்றும் கைதிகள் தொடர்பான ஆவணக்கோவைகளை மீள்பரிசீலனை செய்வதாகத்தான் கூறியதாக சிறைகளின் பணிப்பாளர் தெரிவித்தாக கூறினார்.
 எது எப்படி இருப்பினும் 08 தொடக்கம் 23 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுகின்ற அனைத்து கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டுமானால் தமிழ் அரசியல் அமைப்புக்கள் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஓரணியில் நின்றால் மட்டுமே சாத்தியமாகும என்றார்...

கௌரவ மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் அவர்களின் உரைகளின் போது எமக்கு பல தேவைப்பாடுகள் இருந்தாலும் தற்போது முதன்மையானதும் அவசியமானதுமான ஒரு விடையம் சிறைகளில் வாழும் எமது உறவுகளின் விடுதலையே…

மறப்போம் மன்னிப்போம் என்ற வாசகத்தினை மனதிற் கொண்டு கைதிகள் அனைவரையும் விடுதலை செய்து நல்லாட்சி அரசாங்கம் தான் தற்போது உள்ளது என்பதை நிரூபிக்கவேண்டும் . தவறும் பட்சத்தில் மீண்டும் தமது உரிமைகளை வென்றெடுக்கவென ஒரு போராட்சூழ்நிலையே உருவாகும் என்பதுதான் காலத்தின் தேவையாக உள்ளது  எனவே எதிர்கால நல்லாட்சியை கொண்டு;ள்ள அரசாங்கமானது அரசியல் கைதிகளை உடனடியாக எந்த வித பிணையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் நிலைப்பாடாகும் என்றார்கள்...

பாதிக்கப்பட்வர்களும் தமது மனக்குமுறல்களை சோகவாழ்வை வேண்டுகின்ற விடுதலையை கண்ணீரோடு வெளிப்படுத்தினர்
இதற்கு தகுந்ததொரு முடிவை தமிழ்தேசியக்கூட்டமைப்பு மற்றும் தமிழ் அரசியல் கட்சிகள்  அனைத்தும்  ஒன்றினைந்து மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களிடம் பேசி நல்லதொரு முடிவைப்பெறுவோம் எனும் உறுதி வாக்கோடு பேரணி நிறைவு பெற்றது.



















அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்.-Photos Reviewed by Author on November 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.