சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பேசாலை சென்.மேரிஸ் பாடசாலையில் பரிசளிப்பு விழா.-Photos
மன்னார் பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலத்தின் பரிசளிப்பு விழா நேற்று திங்கள் கிழமை(9) மாலை 2.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திருமதி ரி.எஸ்.கிறிஸ்ரின் குரூஸ் தலைமையில் சிறப்பாக இடம் பெற்றது.
சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்கும் இவ் ஆரம்ப பாடசாலையில் 70 மாணவர்களுக்கு 2014ம் ஆண்டுக்கான பாடம் தொடர்பானதும்; இணைபாட விதான செயல்பாட்டுக்குமான பரிசளிப்பு விழாவாக இவ்விழா இடம் பெற்றது.
அத்துடன் நடப்பாண்டான 2015ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த் 19 மாணவர்களும் இவ் விழாவின் போது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் விசேட விருந்தினராக மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.சியாம் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலா நிதி ஞா.குணசீலன்,சட்டத்தரணி பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் பேசாலை சென்.மேரிஸ் பாடசாலையில் பரிசளிப்பு விழா.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 10, 2015
Rating:
No comments:
Post a Comment