அண்மைய செய்திகள்

recent
-

மடு பண்டிவிரிச்சான் பிரதான வீதி புனரமைப்பு .....


மடு பண்டிவிரிச்சான் பிரதான வீதி புனரமைப்பு பணிகளை ஆரம்பித்து வைத்தார் வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர்...
மன்னார் மாவட்ட, மடு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மடு பண்டிவிரிச்சான் வீதியின் 2.5 கிலோ மீட்டர் வரையான வீதி வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 25-11-2015 புதன் கிழமை காலை 11 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது.

இவ் வேலைத்திட்டத்துக்கான நிதியானது வடக்கு மீன்பிடி,போக்குவரத்து வீதி அபிவிருத்தி அமைச்சின் மீண்டெழும் செலவீனத்துக்கு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, தமது அமைச்சின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மீதியான 20 மில்லியன் ரூபா நிதியை மக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவு செய்யும் வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் திட்டத்துக்கு அமைவாக ஐந்து மாவட்டங்களுக்கும் தலா 4 மில்லியன் வீதம் ஒதுக்கி மிகவும் தேவையாக இருந்த வீதி புனரமைப்பை மேற்கொள்ளும் உயரிய நோக்கில் இத்திட்டம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.

இன் நிகழ்வுக்கு வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் பண்டிவிரிச்சான் பங்குத்தந்தை அவர்களும் மடு பிரதேச செயலக முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.கே.செல்வகுமார் அவர்களும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.பீட்டர் அவர்களும் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் வவுனியா மாவட்ட பிரதம பொறியியலாளர் திரு.ரகுநாதன் அவர்களும் மடு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.





மடு பண்டிவிரிச்சான் பிரதான வீதி புனரமைப்பு ..... Reviewed by Author on November 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.