பாரீஸ் தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூவர்ணமாக தோன்றிய ஈபிள் கோபுரம்....

பாரீஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலையடுத்து மூடப்பட்ட ஈபிள் கோபுரம் மீண்டும் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளியன்று ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து பாதுகாப்பு கருதி பாரீஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரம் மூடப்பட்டது, நான்கு நாட்கள் கடந்த நிலையில் தற்போது மீண்டும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பிரான்ஸ் நாட்டின் தேசிய கொடியில் உள்ள நீலம், வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்களில் காட்சியளித்தது.
மேலும் ஏராளமானோர் அதன் அருகில் கூடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாரீஸ் தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மூவர்ணமாக தோன்றிய ஈபிள் கோபுரம்....
Reviewed by Author
on
November 19, 2015
Rating:
Reviewed by Author
on
November 19, 2015
Rating:



No comments:
Post a Comment