அண்மைய செய்திகள்

recent
-

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களிலேயே அதிகமாக ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றன...


உள்­ளூ­ராட்சி மன்ற நிறு­வ­னங்­க­ளி­லேயே அதி­க­மாக ஊழல் மற்றும் மோச­டிகள் இடம்­பெ­று­கின்­றன. முதலில் உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­க­ளில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்த வேண்­டி­யுள்­ளது. இதற்­காக ஊட­கங்­களின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தாகும் என மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் நிலவும் ஊழல் மோச­டி­களைக் குறைப்­பது தொடர்­பாக மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் மாகாண சபை­களின் ஆணை­யா­ளர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு அதி­கா­ரிகள் மற்றும் பொலிஸ் அதி­கா­ரி­க­ளுடன் இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லுக்கு தலைமை வகித்து உரையாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடந்து கூறு­கையில்,

பொது­மக்கள் ஒரு வீட்­டினை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்­கான அனு­ம­தியைப் பெற்றுக் கொள்­வது உட்­பட பல்­வேறு அனு­மதிப் பத்­தி­ரங்­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளையே நாட­வேண்­டி­யுள்­ளது. இதற்­காக அவர்கள் இலட்­சக்­க­ணக்கில் இலஞ்சம் வழங்­க­வேண்­டி­யுள்­ளது. இல்­லா­விட்டால் அவர்கள் இதற்­காக பல ­வ­ரு­டங்கள் கூட காத்துக் கிடக்க வேண்­டிய நிலை ஏற்­படும்.

இவற்றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கே அமைச்சில் விசேட பிரி­வொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. இப்­பி­ரிவு சுயா­தீ­ன­மாக இயங்­கு­வ­தற்கு அனை­வ­ரதும் ஒத்­து­ழைப்பும் தேவை. குறிப்­பாக ஊட­கங்­களின் பங்­க­ளிப்பு முக்­கி­ய­மா­ன­தாகும்.

பொதுமக்கள் தமது தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­காக உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு விண்­ணப்­பிக்கும் விண்­ணப்­பப்­ப­டி­வங்கள் கூட கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாது வரு­டக்­க­ணக்கில் தேங்­கிக்­கி­டக்­கின்­றன.

இதனைத் தவிர்ப்­ப­தற்­காக வீட்டு நிர்­மாண அனு­ம­திப்­பத்­திரம் போன்­றன விண்­ணப்­பிக்­கப்­பட்டு குறிப்­பிட்ட கால எல்­லைக்குள் வழங்­கப்­பட வேண்­டு­மென அமைச்சு சுற்று நிரு­பங்கள் மூலம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களைக் கோர­வுள்­ளன. அத்­துடன் அமைச்சு அதற்­கான கொள்கைத் திட்­டங்­களை வகுக்­க­வுள்­ளது.

மேலும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்கள் பலர் இன்று ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளாக மாறி­யுள்­ளனர். இதனால் மக்­க­ளுக்கு எதிர்­பார்க்கும் சேவைகள் கிட்­டு­வ­தில்லை. ஒரு கோவையை மற்றோர் அதி­கா­ரிக்கு கொண்டு சென்று கொடுப்­ப­தற்கு கூட இலஞ்சம் வழங்க வேண்­டி­யுள்­ளது. இன்று சட்­ட­வி­ரோத கட்­ட­டங்கள் பாதை­க­ளிலும் மற்றும் இடங்­க­ளிலும் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வ­தற்குக் காரணம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் நிலவும் மோசடிகளாகும்.

எனவே இவற்றைத்தடுத்து உள்ளூராட்சி மன்றங்களில் நல்லாட்சியையும் சிறந்த, நேர்மையான பணிகளையும் உறுதிசெய்வ தற்கும் இலஞ்சம் வழங்காமலிருப்பதற் கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவது தொடர்பாக பல செயற்றிட்டங்கள் முன் னெடுக்கப்படவுள்ளன என்றார்.

உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களிலேயே அதிகமாக ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றன... Reviewed by Author on November 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.