அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பெனிலின் ஈரநிலத்தை எதிர்பார்த்து கவிதை நூல்வெளியீட்டு விழா-05-12-2015


மன்னார் பெனிலின் ஈரநிலத்தை எதிர்பார்த்து கவிதை நூல் தமிழ்சங்கத்தின் வெளியீடாக இன்று சனிக்கிழமை  காலை 10-30 மணியளவில் மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பாரம்பரிய முறைப்படி விருந்தினர் சந்தன மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்களவிளக்கேற்றல் நிகழ்வுடன் தமிழ் மொழி வாழ்த்தினை கேசவன் சரண்சிகா உடன் சங்கீதா இசைக்க வரவேற்புரையினை கவிஞர்-வை.கஜேந்திரன வழங்க தலைமை உரையினை மஹா.ஸ்ரீ.தர்மகுமார குருக்கள் வழங்கவும்.
சிறப்பு நிகழ்வாக மன்னார் பெனிலின் ஈரநிலத்தை எதிர்பார்த்து கவிதை நூலை மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டிமெல் வெளியீட்டுவைக்க திரு.கபிரியேல் ஜேக்கப் ஓய்வு நிலை வலையக்கல்விப்பணிப்பாளர் பெற்றுக்கொண்டார்.

சிறப்பு பிரதிகளை அருட்பணி றொக்சன் குரூஸ் அடிகளாரும் வைத்தியகலாநிதி-எஸ்-லோகநாதனும்
ஏனைய விருந்தினர்களும் பெற்றுக்கொண்டனர் ....

நூலிற்காண ஆய்வுரையை அசத்தலாக தேசியக்கலைஞரான எஸ்.ஏ.உதயன் அவர்கள் நிகழ்த்தினார்.

இந்நிகழ்விற்கு
பிரதம விருந்தினராக…
    திருமதி-அ.ஸ்ரான்லி டிமெல் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களும்

சிறப்பு விருந்தினர்களாக…
    அருட்பணி-தமிழ்நேசன் அடிகளார் இயக்குனர் கலையருவி
    அருட்பணி-செபமாலை அடிகளார் தலைவர் பிரஜைகள் குழு
    திருமதி-பு.மணிசேகரன் கலாசார உத்தியோகஸ்த்தர்
    திரு-சந்தியோகு(அமிர்தம்) தலைவர் சமூகநல அமைப்பு

கவிஞர் பெனிலை வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்து வாழ்த்துக்கவி பாடியவர்கள்….
    கவிஞர்-யோ.புரட்சி-விசுவமடு
    கவிஞர்-ஈழவன்-திருகோணமலை
    கவிஞர்-செந்தூரன்-வவுனியா
    கவிதாயினி-சிவரமணி-திருகோணமலை
    கவிதாயினி-நுஸ்ரி-மட்டக்களப்பு
    முல்லை இசைக்குழுவின் தலைவர் லோகேஸ்வரன்
இவர்களோடு மன்னார் கவிஞர்கள் சுவைஞர்கள் கலையார்வலர்கள் கலந்து சிறப்பிக்க
விருந்தினர்களின் உரையின் சாரம்சமாக மாற்றுத்திறனாளியான மன்னார் பெனிலின் தன்னம்பிக்கை இடைவிடாத முயற்சி வலிகளை தாங்கி தாங்கி பழகிப்போன மனம். கவிஞன் தனது வலியோடு சமூதாயத்தின் வலியினை தமிழினம் பட்ட துன்ப துயரங்களை கொடுமைகளை அநீதிகளை அப்பட்டமாக துணிந்து தெளிவான கண்ணோட்டத்தின் காலத்தின் கண்ணாடியில் பதித்துள்ளார். ஆத்தனை நிகழ்வுகளையும்  போருக்கு முன்னும் பின்னும் என கவிதையில் வடித்து இருக்கிறார் இதுதான் எம்மவரின் துடிப்பு எனலாம் இவர் இன்னும் பல நல்ல ஆக்கங்களை வெளிக்கொணர்ந்து தமிழுக்கும் தமிழர்க்கும் தரவேண்டும் அதற்கு இறைவன் இவருக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் எனவாழ்த்தினார்கள். கவிஞரின் நன்றியுரையோடு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய திலீபன் பெனிலின் கவிதை நூலில் இருந்து தனக்கு பிடித்த “எழுதுகோலின் எத்தனிப்பு” கவிதையை படித்து நிகழ்வை இனிதே நிறைவு செய்தார்,




























இக்கவிஞனை இமையம் தொட வேண்டும் என நியூ மன்னார் இணையமும் வாழ்த்தி மகிழ்கின்றது…
மன்னார் பெனிலின் ஈரநிலத்தை எதிர்பார்த்து கவிதை நூல்வெளியீட்டு விழா-05-12-2015 Reviewed by Author on December 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.