அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலையில் குடிகொண்டிருக்கும் புனித வெற்றி அன்னை ஆலயத்திருவிழா--- 08-12-2015


மன்னார் மாவட்டத்தில் பாரம்பரியமாக பேசாலையில் குடிகொண்டிருக்கும் புனித வெற்றி அன்னை ஆலயத்திருவிழா 29-11-2015 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக 09 நாட்கள் நவநாள் ஆராதனையும் வழிபாடுகளும் நடைபெற்று 07-12-2015 திங்கள் கிழமை நற்கருணை எழுந்தேற்ற சிறப்பு வழிபாட்டுடன் இன்று காலை 7-00 மணிக்கு திருவிழாத்திருப்பலி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பலி நிறைவில் அன்னiயானவள் திருச்சுரூபபவனியாக வந்து பக்தர்களுக்கு அருளாசிவழங்கினால்  அடைமழைபெய்து கொண்டிருந்த வேளையிலும் அன்னையவளின் ஆசிரைப்பெற கூடியிருந்த பக்கதகோடிகள் மழையைக்கண்டு கலங்கியபோதும் அன்யையவளின் திருச்சுரூபபவனி ஆரம்பமாக மழை குறைவாக பெய்து நின்று போனது மக்கள் மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கியது.

உலகம் பூராகவும் உள்ள கிறிஸ்த்தவர்கள் அமலஉற்பவத்திருநாளாகவும் கொண்டாடும் வேளை கடன் திருநாட்களில் சிறப்பான நாளாகவும் இவ்விழா அமைகின்றது.
அன்னையவளின் ஆசியைப்பெற்றுக்கொண்டவர்களாக பங்குமக்களும் பங்குத்தந்தையும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொண்டனர்…









மன்னார் பேசாலையில் குடிகொண்டிருக்கும் புனித வெற்றி அன்னை ஆலயத்திருவிழா--- 08-12-2015 Reviewed by Author on December 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.