அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதல் வழங்கி வைப்பு.(படம்)

'நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின்' ஏற்பாட்டில் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் இடம் பெற்று வந்த கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சன்றிதல் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (8) மாலை அச்சங்குளம் ம.வி பாடசாலையில் இடம் பெற்றது.

'நண்பனின் தேவை நற்பணி மன்றத்தின்' தலைவர் க.பவமொழி பவன் தலைமையில் இடம் பெற்ற குறித்த சான்றிதல் வழங்கும் நிகழ்விற்கு பிரதம விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலா நிதி ஞா.குணசீலன்,நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை அருள் ராஜ் குருஸ்,சிறப்பு விருந்தினர்களாக சமூக சேவையாளர்களும்,வர்த்தகர்களுமான என்.கனேசலிங்கம்(சொக்கன்),த.சுந்தரலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 39 மாணவ மாணவிகள்,இளைஞர்,யுவதிகளுக்கு சான்றுதல்கள் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் கணினி கற்பித்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசில்களை வழங்கி கௌரவித்தனர்.

பின் தங்கிய கிராமங்களை அடையாளம் கண்டு குறித்த கணணி பயிற்சிகள் போன்று ஏனைய தொழிற்பயிற்சிகளை வழங்கி இக்கிராம மக்களின் முன்னேற்றத்திற்கு அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும் குறிப்பாக அச்சங்குளம் கிராமத்தில் இடம் பெற்ற கணினி பயிற்சி நெறியை சிறப்பான முறையில் நடத்திய 'நண்பனின் தேவை நற்பணி மன்ற' குழுவினருக்கும் அவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கியவர்களுக்கும் தமது கிராமம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக சான்றிதல்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.


(மன்னார்நிருபர்)
(08-12-2015)














மன்னார் அச்சங்குளம் கிராமத்தில் கணினி பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதல் வழங்கி வைப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on December 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.