மன்னார் மடு விகாராதிபதி மர்மமான முறையில் இறந்துள்ளார்
மன்னார் மடு பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ போதிராஜ விகாரையின் விகாராதிபதி மர்மமான மறையில் உயிரிழந்துள்ளதாக மடு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பன்னிப்பிட்டியே ஜினரத்ன தேரரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் விகாரையில் உள்ள அறை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தேரருக்கு நேற்று மதியம் தானம் எடுத்துச் சென்று கொடுத்த போது அவர் சுகவீனமாக இருந்தாகவும் தானத்தை அவர் சாப்பிட்டிருக்கவில்லை எனவும் பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.
தேரரின் சடலத்திற்கு அருகில் நாவல் நிற திரவம் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பன்னிப்பிட்டியே ஜினரத்ன தேரரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் விகாரையில் உள்ள அறை ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
தேரருக்கு நேற்று மதியம் தானம் எடுத்துச் சென்று கொடுத்த போது அவர் சுகவீனமாக இருந்தாகவும் தானத்தை அவர் சாப்பிட்டிருக்கவில்லை எனவும் பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.
தேரரின் சடலத்திற்கு அருகில் நாவல் நிற திரவம் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மன்னார் மடு விகாராதிபதி மர்மமான முறையில் இறந்துள்ளார்
Reviewed by NEWMANNAR
on
December 17, 2015
Rating:

No comments:
Post a Comment